Viduthalai: வாழ்வியல் சிந்தனைகள்

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label வாழ்வியல் சிந்தனைகள். Show all posts
Showing posts with label வாழ்வியல் சிந்தனைகள். Show all posts

Friday, March 22, 2024

இளைஞர்களே, இதுபோன்ற நூல்களைப் படியுங்கள்! (2)

March 22, 2024 0

வாழ்வியல் சிந்தனைகள் – கி.வீரமணி அவர் தன் படிப்பை முடித்தவுடன் மாதம் 14,000 ரூபாய் சம்பளத்தில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அவர் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தைத் தன் அப்பாவிடம் கொடுத்தபோது, அதைப் பார்த்து அவர் மலைத்துவிட்டார். அவர் தன் மகனிடம், “இத...

மேலும் >>

Thursday, March 21, 2024

இளைஞர்களே, இதுபோன்ற நூல்களைப் படியுங்கள்! (1) - கி.வீரமணி

March 21, 2024 0

பல நெருக்கடியான, அடுக்கடுக்கான பணிச் சுமைகள் காரணமாக ‘வாழ்வியல் சிந்தனைகள்’ மூலம் வாசக உறவுகளோடு முன்பு போல கலந்துறவாடவில்லையே என்ற ஏக்கப் பெரு மூச்சு என்னுள் எழத்தான் செய்கிறது! என்ன செய்வது – காலத்தை எவ்வளவு நாம் கட்டிப்பிடித்தாலும் அது எளிதில் ந...

மேலும் >>

Monday, March 4, 2024

உடல் பருமன் பாதிப்பு - நம் இளைஞர்கள் கவனிக்க!

March 04, 2024 0

உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக – உலகளாவிய ஆய்வறிக்கை கூறும் தகவலை அறிவியல் தூரிகையான லான்செட் (Lancet) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய இளம்பிராயத்தின...

மேலும் >>

Tuesday, February 20, 2024

"கடிகாரம் ஓடுமுன் ஓடு!" (3) - வாழ்வியல் சிந்தனைகள்

February 20, 2024 0

தந்தை பெரியாரின் காலந் தவறாமை, காலந் தாழ்த்தாமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டான நிகழ்வுகள் உண்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் ‘மாலை மலர்’ நாளேடு அவரது 74ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி ஒரு வரி பதில் கேட்டு பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் ஒரு கேள்வி: “ப...

மேலும் >>

Saturday, February 17, 2024

வாழ்வியல் சிந்தனைகள் . கி.வீரமணி - "கடிகாரம் ஓடு முன் ஓடு!" (2)

February 17, 2024 0

காலந் தாழ்த்தாது, எதையும் குறித்தபடி குறித்த நேரத்தில் செய்வது என்பது காலத்தை வெகுவாக மதிப்பது மட்டுமல்ல; நமக்கும் ஒரு வகை ஒழுங்கு கட்டுப்பாட்டினை அன்றாட வாழ்க்கைக்கு பெற்றுக் கொடுப்பதாகும்! அதன்படியான சீரிய அறிவுரையே “கடிகாரம் ஓடுமுன் ஓடு” என்பதாக...

மேலும் >>

Wednesday, February 7, 2024

புற்றுநோய் - அற்ற புது உலகம் காண்போம்!

February 07, 2024 0

புற்றுநோய்தான் நோய்களிலேயே வரு முன்னரே தடுக்கும் சக்தி கொண்ட, – வல்லமையைக் கொண்ட- நேரிடைப் பலன் தரும் வகையிலுள்ள – எவ்வளவு ஆராய்ச்சிகள் தொடர்ந்த நிலையிலும் – தகுந்த மருந்து ஊசிகள் அல்லது வேறு ஏதோ முறை மூலம் வராமலேயே தடுக்க இயலாத கொடும் நோயாக உள்ளது...

மேலும் >>

Saturday, February 3, 2024

"உங்களது எதிரிகள் யார்?- தெரிந்து கொள்ளுங்கள்!" (2)

February 03, 2024 0

நேற்று (2-2-2024) சுட்டிக்காட்டி எழுதியபடி – “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்” என்பதில் எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி மூன்றாவது வரிசையில் சோம்பலைச் சேர்த்துள்ளார்! சோம்பல் என்பது ரொம்ப ரொம்ப விரைவாக நம்மை அது பற்றிக் கொள்ளும் ...

மேலும் >>

Friday, February 2, 2024

"உங்களது எதிரிகள் யார்?- தெரிந்து கொள்ளுங்கள்!" (1)

February 02, 2024 0

நம்மில் பலர் மற்றவர்களை வென்று தமது ஆளுமையினை அகிலம் அறியச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்! அது தவறு என்று கூற வேண்டியதில்லை. முறையற்ற முறையில் – கோணல் குறுக்கு வழிகளில் மற்றவர்களது உரிமைகளைப் பறிக்கத் திட்டமிடுவது தான் தவறே ஒழிய, தன்னை உயர...

மேலும் >>

Tuesday, January 23, 2024

முதியோர் நலன்பற்றிய கவனக் குறிப்புகள் (2)

January 23, 2024 0

முதியோர்களின் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு ஏற்படும் அவலங்களை டாக்டர் வரிசைப்படுத்தினார். (1) விழுதல் அடிக்கடி கீழே விழுந்து விடுதல் (Fall) (1) படுக்கையிலிருந்தோ, (2) நடக்கும் போதோ, (3) குளியல் அறையில்…. இப்படி விழுதல் (Fall) மூலம் எலும்பு முறிவுகள் ...

மேலும் >>

Monday, January 22, 2024

முதியோர் நலன்பற்றிய கவனக் குறிப்புகள் (1)

January 22, 2024 0

பெரியார் திடலில் உள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் கூட்டங்களில், 11.1.2024 அன்று முதியோர் நலவாழ்வுப் பற்றிய சிறப்புப் பொழிவு தலைசிறந்த மருத்துவர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் பணிபுரிய...

மேலும் >>

Sunday, January 14, 2024

இப்படியும் யோசிக்கலாமே!

January 14, 2024 0

நாளை தான் (15.1.2024) உண்மையான தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் முதல் நாள் உதயம். புரட்சிக் கவிஞர் மிக அருமையாக – மற்றெவரும் சிந்திக்காத தனித் தன்மையான கருத்தைக் கவிதை யாக்கி நமக்கெல்லாம் பகுத்தறிவுப் பொங்கல் சமைத்துத் தந்தார்! “மார்கழி உச்சியில் ம...

மேலும் >>

Wednesday, January 3, 2024

புத்தாண்டில் ஒரு புத்தாக்கச் சிந்தனை இதோ! வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

January 03, 2024 0

நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்கிறோம். அது ஒரு நல்ல ஒருங்கிணைந்த அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிச்சம்; நட்பின் புத்தாக்கம். ஆனால் அதுவே காலப் போக்கில் பலருக்கு சடங்கு சம்பிரதாயமாக மாறி விடுகிறது! மகிழ்ச்சியை வர...

மேலும் >>

Saturday, December 23, 2023

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

December 23, 2023 0

திடுக்கிட வைக்கும் திருட்டு நூல் விற்பனை! திருட்டுக்களில் பல வகை உண்டு. பணத் திருடர்கள், பக்காத் திருடர்கள், முக்கிய புள்ளி விவரங்களைத் திருடி பிற நாட்டுக்கு விற்பது, இந்தியாவின் கடவுளர், கடவுளச்சிகளின் சிலை திருட்டு என இப்படி பல உண்டு என்றாலும், இ...

மேலும் >>

Friday, November 24, 2023

"இறந்த மனிதரும் - இறக்காத மனிதமும்!"

November 24, 2023 0

நேற்று (23.11.2023) நாளேடுகளில் வந்துள்ள ஒரு அருமையான செய்தி:"மனிதத்தின் மறுமலர்ச்சி இதோ!" என்று இந்த உலகிற்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி படைத்த ஒரு செய்தி.  இறந்த பின்பும் வாழும் மனிதர்களை நமது 'ஒத்தறிவு' (Empathy) உருவாக்கித் தரும் ஆற்றல் ...

மேலும் >>

Thursday, November 23, 2023

பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (2)

November 23, 2023 0

பொதுவாக நாம் யாரை நம்புகிறோம்? நம்மையும், நம்முடைய நம்பிக்கையைச் சம்பாதித் துள்ள நம்முடைய குடும்பத்தினரையும், நம்முடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களையும், நம் சகாக்களையும் நாம் நம்புகிறோம். நம்பிக்கை சம்பாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் ஒருவரை நம்பா...

மேலும் >>

Wednesday, November 22, 2023

பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (1) : வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

November 22, 2023 0

பல்வேறு கால நெருக்கடி, கழகப் பணிகள், நட்புறவுகள் சந்திப்பு, மாலை நேர மக்கள் வகுப்புகள் - இப்படி என்னை உழைக்க வைக்கும் உயர் தனி வாய்ப்புகளிடையே எனது அறிவுத் தாகத்தைத் தணிக்கவும், எழுத்துப் பசியை ஆற்றவும்தான் புதிய புத்தகப் படிப்பு என்ற எனது விசித்தி...

மேலும் >>

Saturday, November 18, 2023

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

November 18, 2023 0

 "நமது முடிவுகள் எப்படி இருக்க வேண்டும்?"ஒருவர் எவ்வளவு தீவிரமாகவும், திறனோடும் சிந்தித்தாலும்கூட, அதை அவர் செயலில் முடித் துக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் நேர்த்தி யுடனும், நேரங்கடத்தாமலும், நேர்மையான முறையிலும் செய்து முடித்தலே சரியானதாகும்.இத...

மேலும் >>

Thursday, October 12, 2023

நமது நீதிபதிகளின் புதுமைப் புரட்சி - வாழ்த்துகள்!

October 12, 2023 0

 நமது நீதிபதிகளின் புதுமைப் புரட்சி - வாழ்த்துகள்!நமது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பலர் சமூகப் பொறுப்பின்படியும், மனிதநேயம், அன்பை வளர்ச்சி அடையச் செய்யும் வகையிலும் சில புதுமையான தீர்ப்புரைகளை வழங்குவது மற்றவர்களுக்கும், வேற்று மாநிலத்தவருக்க...

மேலும் >>

Wednesday, October 11, 2023

"இதற்கும் நேரம் ஒதுக்கப் பழகுவோம்"

October 11, 2023 0

  "இதற்கும் நேரம் ஒதுக்கப் பழகுவோம்""காலம் போன்ற கடமை வீரனை" எங்கு தேடினும் கண்டுபிடிக்கவே முடியாது. யாருக்காகவும் அது காத்திருக்காமல் - என்னதான் பயங்கரமான சூறாவளி, சுழற்காற்று, 'சுனாமி' என்ற நிலை ஏற்படினும், அடாது மழை, அதீதமான வெள்ளப் பெருக்கு, பூ...

மேலும் >>

Tuesday, October 10, 2023

"விழுதல்" - பல வகை என்றாலும், கவனம்! கவனம்!!

October 10, 2023 0

 "விழுதல்" - பல வகை என்றாலும், கவனம்! கவனம்!!முதியவர்களின் வாழ்க்கையில் முதுமை வளர வளர அவர்களது கவலையும், கவனமும் மற்றவர்கள் - மனைவி, மக்கள், சொத்து, சுற்றம் பற்றி அதிகம் ஈடுபாடு  கொள்வதற்குமுன், அவர்கள் தங்களது பாதுகாப்பில் அன்றாட வாழ்க்கை நிகழ்வு...

மேலும் >>