நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் – தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் – தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு!

featured image

சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் –மேற்கொண்டுள்ள அய்ந்து குழுவினருக்கும் தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்தி விவரம் வருமாறு:

தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரைப் பயணம்
பொள்ளாச்சி
நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணத்தில் தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரை பொள்ளாச்சி நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சி.மாரிமுத்து தலைமை தாங்கினார்.
வழக்குரைஞர் இமயவர்மன், வழக்குரைஞர் பிரபாகரன், பொறியாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தாராபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் செழியன், மாவட்டத் துணைச் செயலாளர் சிவராஜ், மாவட்ட அமைப்பாளர் சு.ஆனந்தசாமி, நகரச் செயலாளர் அர.நாகராஜ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் வி.வருண், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வின்சென்ட், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் கி.கதி ரேசன், அஜித் குமார், சுரேஷ், வழக்குரைஞர் பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் பரப்புரைப் பயணத்திற்கு ஆதரவு தந்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.
பயணத்தில் பங்கேற்றுள்ள தோழர்களுக்கு பொள்ளாச்சி நகர திராவிட கழகம் சார்பில் பயனடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

கோவை கழக மாவட்டம் – சுந்தராபுரம்
கோவை கழக மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் மாவட்ட தலைவர் மா.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, நகரத் தலைவர் செந்தில்நாதன், மகளிர் பாசறை கவிதா, குரு, நிலக்கடை செல்வம், இருதய ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஒன்றிய அரசு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைச் செயலாளர் காளிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன், மற்றும் தமிழ்முரசு, வெங்கடேஷ், வெற்றிச்செல்வன்,சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைத்தார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ்திலீபன் சிறப்புரையாற்றினார்.

கோவை கழக மாவட்டம்– உக்கடம்
கோவை கழக மாவட்டம் உக்கடம் பகுதியில் மா.சந்திரசேகர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
ஆ.பிரபாகரன் மாவட்ட செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, நகரத் தலைவர் செந்தில்நாதன், மகளிர் பாசறை கவிதா, குரு, நிலக்கடை செல்வம், இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஒன்றிய அரசு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைச் செயலாளர் காளிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன் மற்றும் தமிழ் முரசு,காரமடை ராஜா, வெங்கடேஷ், வெற்றிச்செல்வன், சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.

கோவை கழக மாவட்டம்- புளியகுளம்
கோவை கழக மாவட்டம் புளியகுளம் பகுதியில் மா.சந்திரசேகர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
ஆ.பிரபாகரன் மாவட்ட செயலாளர், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, நகரத் தலைவர் செந்தில்நாதன், மகளிர் பாசறை கவிதா, குரு, நிலக்கடை செல்வம், இருதய ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஒன்றிய அரசு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைச் செயலாளர் காளிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன் மற்றும் தமிழ்முரசு, வெங்கடேஷ், வெற்றிச்செல்வன்,சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார்.
கழகப் பேச்சாளர் புளியகுளம் வீரமணி தொடக்க வுரையாற்றினார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ்திலீபன் சிறப்புரையாற்றினார்.
‘‘நீட் எதிர்ப்பு பரப்புரை ஏன்?’’ என்ற புத்தகங்களை திமுக கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன் மற்றும் திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர் அவர்களிடமிருந்து 50 புத்தகங்கள் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment