தஞ்சாவூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

தஞ்சாவூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்

featured image

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகம் சார்பில் மாநில தழுவியஅளவில் இரு சக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி இராமநாதபுரத்தில் புறப்பட்ட நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் இரண்டாவது குழு தோழர்கள் தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு தெற்கு ஒன்றியம் கவராப்பட்டிற்கு 14.07.2024 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு வருகை தர உள்ளார்கள்.

தொடர்ந்து ஒக்கநாடு கீழையூர், உரத்தநாடு, மேஉளுர், தஞ்சாவூர், கண்டியூர் திருவையாறு வழியாக அரியலூர் மாவட்டம் திருமானூர் சென்றடைய உள்ளார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் வைத்துள்ள அனைத்து கழக தோழர்களும் கவராப்பட்டில் காலை 11 மணிக்கு வரவேற்று திருவையாறு ஒன்றியம் விளாங்குடி வரை சென்று அரியலூர் மாவட்ட தோழர்களிடம் பயண குழுவினரை வழியனுப்பும் வரை அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவன்: சி.அமர்சிங், மாவட்டத்தலைவர்
அ.அருணகிரி, மாவட்டச்செயாளர்
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment