கழகத் தலைவருக்கு கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

கழகத் தலைவருக்கு கடிதம்

சிந்திக்க வைக்கும் கருத்துகள்
எங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
கடந்த நான்கு நாட்கள் நடைபெற்ற குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், முதல் இரண்டு நாட்கள் தாங்கள் பங்கேற்று சிறப்பித்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இரண்டாம் நாள் (ஜூலை-5) ஏர்வாடியில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்தது.
மேலும் நான்கு நாட்கள் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை, யாருக்கும் எவ்வித பிரச்சினையுமின்றி சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இருபால் இளைஞர்களில் அதிகம் பங்கேற்றவர்கள் கல்லூரி மாணவர்கள்தான் என்பது சிறப்பு. பயிற்சிப் பட்டறை நிறைவு பெற்றபின், ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ப.க.மாநில துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி, தலைமை கழக அமைப்பளர் இல.திருப்பதி, மற்றும் மாவட்டத்தலைவர் த.வீரன் ஆகியோர் இணைந்து வரவு செலவுகளை சரி பார்த்து, எல்லா செலவுகளுக்கும் பணம் கொடுத்து, யாருக்கும் பாக்கியின்றி முடித்து விட்டோம் என்பதையும், தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் நாள் (ஜூலை-4) சாம்பவர் வடகரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிடவேண்டும். மகளிர் அதிகம் நிறைந்த அக்கூட்டத்தில், அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், மிக எளிமையாக தாங்கள் ஆற்றிய மிக அருமையான உரை அவர்கள் மனதில் இடம் பிடித்ததை கண் கூடாகக் காண முடிந்தது. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. அமைப்புகள் உள்ள அப்பகுதியில் தாங்கள் ஆதாரத்துடன் எடுத்துரைத்த கருத்துகள் அவர்களையும் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் அய்யமில்லை. நன்றி!

– சீ.டேவிட் செல்லத்துரை
மேலமெஞ்ஞானபுரம், தென்காசி

No comments:

Post a Comment