வடகுத்து பெரியார் படிப்பகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 7, 2024

வடகுத்து பெரியார் படிப்பகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

featured image

வடகுத்து, ஜூலை7- வடகுத்து பெரியார் படிப்பகத்தில் மாதாந்திர கூட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா 101ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி 92ஆவது நிகழ்வு 29.6.2024 அன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

கிளைத் தலைவர் தங்க பாஸ்கர் தலைமை ஏற்க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட் டல் ராமநாதன் அனை வரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.அருணாச்சலம், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

கடலூர் மாவட்ட செயலாளர் கவிஞர் க.எழிலேந்தி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் மாநில இளைஞரணி துணை செயலாளர் கோ. வேலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நா.உதயசங்கர், வா. சேகர், வடலூர் கோ.இந்திரஜித், கடலூர் மாதவன், இரா சின்னதுரை, வடலூர் குணசேகரன், முருகன், க.சேகர், பண்ருட்டி செ.முனியம்மாள், இரு.ராஜேந்திரன், செல்வராசு, தர்மலிங்கம், கோபால், சந்திரசேகரன், திராவிடன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் இரா. கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment