காசா பள்ளியின் மீது வெறிகொண்டு ஏவுகணை தாக்குதல்: குழந்தைகள் உட்பட 16 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

காசா பள்ளியின் மீது வெறிகொண்டு ஏவுகணை தாக்குதல்: குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

featured image

காசா, ஜூலை 8- காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயிருக்கு பயந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய காசா அல்நுசிராத் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இஸ் ரேல் படையினர் சரமாரியாக குண் டுகளை வீசினர்.
இதில் அங்கு அகதிகளாக தங்கி யிருந்த 16 பேர் இறந்து விட்டதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment