உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு!

featured image

சென்னை, ஜூன் 15- கலை­ஞர் 100–இல் புதிய பேச்­சா­ளர்­களை அடை­யாளம் காண இளை­ஞ­ர­ணிச் செய லா­ளர் – அமைச்­சர் உத­ய நிதி ஸ்டாலின் முன்­னெ டுப்­பில் தி.மு.க. இளைஞர் அணி­யும், கலை­ஞர் செய்­தி­கள் தொலை­க்காட்­சி யும் இணைந்து நடத்­த­வுள்ள கலை­ஞர் நூற்­றாண்டு பேச்­சுப் போட்டி வெற்றி பெற வாழ்த்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள தி.மு.க. தலை­வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், உரக்­கப் பேச உடன் பிறப்புகளே வருக என அழைப்பு விடுத்­துள்­ளார்.

தி.மு.கழ­கத் தலை­வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் சமூக வலை­த­ளப்­ப­திவு வரு­மாறு:
பகுத்­த­றி­வை­யும் இன­மான உணர்­வை­யும் தட்­டி யெ­ழுப்­பும் ஆற்­றல்­மிக்க பேச்­சா­ளர்­கள் தமிழ் மண்­ணில் விளை­வித்த புரட்­சி­யால் தலை­நி­மிர்ந்து நிற்­கி­றோம்! சொல்­லாற்­ற­லில்தலை­வர் கலை­ஞ­ருக்கு அவரே நேர். கலை­ஞர் 100–இல் புதிய பேச்­சா­ளர்­களை அடை­யா­ளம் காண­வும் – தமிழ்ச்­ச­மூ­கத்­துக்கு அடை­யா­ளம் காட்­ட­வும் தம்பி உத­ய­நிதி ஸ்டாலின் முன்­னெ­டுப்­பில் தி.மு.க. இளை­ஞர் அணி­யும், கலை­ஞர் செய்­தி­கள் தொலை­காட்­சி­யும் இணைந்து நடத்­த­வுள்ள “என் உயி­ரி­னும் மேலான – கலை­ஞர் நூற்­றாண்டு பேச்­சுப் போட்டி” வெற்றி பெற வாழ்த்­து­கி­றேன்! எத்­த­னையோ தலை வர்­களை அடை­யா­ளம் காட்­டிய மேடை உங்­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றது. உரக்­கப் பேச, உடன்­பி­றப்­பு­களே வருக!
-இவ்­வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பதி­விட்­டுள்­ளார்.

நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரி இனி இருபாலர் கல்லூரியாக மாற்றம்

சென்னை, ஜூன் 15 சென்னை நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், நந்தனம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றி அதன் பெயரை அரசு கலைக் கல்லூரி, நந்தனம் என்று மாற்றி ஆணை வழங்குமாறு அக்கல்லூரியின் முதல்வர் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார்

அக்கருத்துருவை ஆய்வுசெய்து நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியை 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றியும், அக்கல்லூரியின் பெயரை அரசு கலைக் கல்லூரி, நந்தனம் எனப் பெயர் மாற்றியும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment