பள்ளிகளில் கல்வி மேம்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள் மாதம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

பள்ளிகளில் கல்வி மேம்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள் மாதம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை. ஜூன் 12- பள்ளிக் கல்வித்துறையின் புதிய வழிகாட்டுதல் படி மாவட்ட ஆட்சியர் கள் செயல்படத் தலைமைச் செயலாளர் உத்தர விட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை யில் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மேலும் புதிய திட்டங்களும் அறிமுகப் படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், “மாவட்ட அளவில் கல்விக்குறித்த மேம்பாட்டு ஆய்வுகளை நடத்துவதற்கும், மதிப்பீடுகளை ஆய்வு செய் யவும் பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மாவட்டத்தில் கல்வி யின் தரத்தை முறையாக மேம்படுத்தவும், விரிவான சீர்திருத்தங்கள் மூலம் சமூக மேம்பாட்டை ஏற்ப டுத்தவும், மாநிலத்தின் நோக் கத்துடன் இணங்கவும் வடி வமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி மறு ஆய்வுக்கான புதிதாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை போன்ற அமைப்புகளின் ஆய்வுக் கூட்டங்களைப் போன்று, மாவட்டக் கல்வி மதிப் பாய்வு மாதந்தோறும் நடத்தப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலை வர், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு வின் தலைவர் என்ற முறை யில், மதிப்பாய்வில் முக்கியப் பங்கு உள்ளது.
மேலும் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப் பின் மூலம் தற்போதுள்ள கல்வி முறைகளை முழுமை யாகப் பெற்றிருப்பதையும், முழுமையாக அறிந்திருப் பதையும், எதிர்காலத்தின் கல்வித் தேவைகளை மாற் றியமைக்கும் வகையில் மேம்படுத்துவதையும் உறுதி செய்யும்.
மதிப்பாய்வு மூன்று முதன்மைக் கருப்பொருள் களில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளியின் உட் கட்டமைப்பின் படி மதிப்பீடு செய்தல், பராமரித்தல், தேவை யான பள்ளி வசதிகளை உருவாக்குதல் மற்றும் அடிப் படை வசதிகளை வழங்க வேண்டும். இது தொடர்பாக, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் போன்ற தொடர்புடைய துறைகளையும் ஒருங்கிணைத் துச் செயல்படுத்த வேண்டும்.
போக்குவரத்து, சத்துண வுத் திட்டங்கள், சுகாதார சேவைகள், கொள்கை ஒருங் கிணைப்பு போன்றவை கல்வி தொடர்பான சேவைகள் மற்றும் சிக்கல்க ளில் அடங்கும். இது சம் பந்தமாக, காவல்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சமூக நலன் போன்ற தொடர்புடைய துறைகளு டன் ஒத்துழைப்பது இன் றியமையாதது.

பாடத்திட்டம், கற்பித் தல் முறைகள் மற்றும் மாணவர் செயல்திறன் மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியையும் கற்பிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பகுதிகளில் பின்வருவன அடங்கும்:
மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களின் வருகை கண்காணிப்பு, பள்ளி செல்லாத குழந்தைகள் மாணவர்களின் வருகை, கம்ப்யூட்டர் ஆய்வகம், தகவல் தொழில்நுட்ப வச திகள் மாணவர்களின் கற்றல் மதிப்பீடு, 10, 11, 12 மாணவர்களுக்கான சிறப்பு மதிப்பீடுகள் பள்ளிப் பார்வை என்ற செயலியில் வகுப்பறை கண்காணிப்பு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் வானவில் மன்றம், கணக்கு அறிவியல் மன்றம், அறிவியல் கண்காட்சி வாசிப்பு இயக்கம் மேனாள் மாணவர்களின் பங்களிப்பான ‘விருதுகள்’ மாவட்டக் கல்வி மறு ஆய்வு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக் கியமான விவரங்கள், தனிப்பட்ட பகுதியின் முக்கிய அளவீடுகளைத் தொடர்புடையவர்களைக் கொண்டு மறு ஆய்வு செய்யும் வகையில் உள்ளது.
மாவட்டக் கல்வி மதிப் பாய்வை அவ்வப்போது நடத்த ஏற்பாடு செய்யுங்கள். கல்வி முறை மற்றும் தரத்தை மேம்படுத்துதல் எதிர்கால சந்ததியினரின் வாழ்வை மேம்படுத்தும்” என தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment