வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகள்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகள்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

சென்னை, ஜூன் 13– கோவை, திருநெல்வேலி, மதுரைz, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் எல்லா நகரங்களில் இருந்தும் சென்னைக்கு நாள் தோறும் ஆம்னி பேருந்துகள் இயக்கப் படுகின்றன.ஆயிரக்கணக்கான பேருந்துகள் நாள்தோறும் சென்னைக்கு வந்து செல்கின்றன. சென்னைக்கு மட்டு மல்லாமல், கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொதுவாக ஆம்னி பேருந்து களில் சென்னையில் இருந்து வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் மற்ற ஊர்க ளில் இருந்து சென்னைக்கு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேநேரம் முகூர்த்த நாட்கள், விடுமுறை நாள்கள், விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

குறிப்பாக பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு போன்ற விழாக் காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளையே அதிகம் விரும்புகிறார்கள். ரயில், மற்றும் பேருந்துகளில் இடம் கிடைக்காது என்பதால் ஆம்னி பேருந்துகளை அதிகம் விரும்புகிறார்கள். நேரடி ரயில் வசதி இல்லாத ஊர்களில் ஆம்னி பேருந்துகள் தான் தற்போது மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஓடும் ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் உள்ளது. அதேநேரம் வெளிமாநிலங்கள் செல்லும் பேருந்துகளும் கணிசமாக உள்ளன.. தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஓடும் ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து விதிகளின் படி, தமிழ்நாடு வாகன பதிவு எண்ணாக இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் ஓடும் கணிசமான ஆம்னி பேருந்துகள் தமிழ்நாடு பதிவெண்ணுடன் இல்லை. கருநாடகா, புதுச்சேரி, அசாம் உள்பட வேறு மாநிலங்களில் பதிவு செய்து ஓடுகிறது. இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழ்நாடு அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாடு பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது.இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட் டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந் துகள் வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என அரசுப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment