காரைக்குடி ப.சுந்தரம் மறைவு: கழகத்தின் சார்பில் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

காரைக்குடி ப.சுந்தரம் மறைவு: கழகத்தின் சார்பில் மரியாதை

featured image

காரைக்குடி, ஜூன் 4- காரைக்குடி கழக மாவட்ட ப.க. தலைவர் ப.சுந்தரம் கடந்த 28.5.2024 அன்று மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வுகள் 29.5.2024 அன்று இல்லத்தில் நடைபெற்றது.
காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் கு.வைகறை, அண்ணா தமிழ்க் கழக செயலாளர் அ.கதிர்வேல் ஆகியோர் இரங்கலை தெரிவித்தனர்.
மறைந்த ப.சுந்தரம் எழுதி வைத்திருந்த மரண சாசனத்தை கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா வாசித்தும் இரங்கலும் தெரிவித்தும் பேசினார்‌‌.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.இரவி, நா.குணசேகரன், பா. கணேசன், சி.செல்வமணி, கொ.மணிவண்ணன், இ.ப.பழனிவேலு, தி.செயலெட்சுமி, மு.சு.கண்மணி, எஸ்.முழுமதி, கொரட்டி வீ.பாலு, சேகர், ஆ.பாலகிருட்டிணன், ஜோசப், வீ.முருகப்பன், திருச்சி நடராஜன், சுப.பரமசிவம், மூ.வெங்க டேசன், துரை.செல்வம், பொன்.துரை உள்ளிட்ட கழகத் தோழர்களும், உறவினர்களும் இறுதி மரியாதை செய்தனர்.
மறைந்த ப.சுந்தரத்தின் உடல் எந்தவித மூட சடங்குகளும் இன்றி சுயமரியாதை கொள்கைப்படி எரியூட்டப்பட்டது.

No comments:

Post a Comment