உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்?

உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்?
103ஆம் சட்ட திருத்தம்.
8.1.2019 – மக்களவையில் நிறைவேற்றம்.
9.1.2019 – மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
12.1.2019 – குடியரசுத் தலைவர் ஒப்புதல்
17.1.2019 – ஒன்றிய சமூக நலத்துறை ஆணை
19.1.2019 – ஒன்றிய பணியாளர் துறை செயல்படுத்த ஆணை பிறப்பித்தல்
29.1.2019 – ஒன்றிய சுகாதாரத்துறை ஆணை பிறப்பிப்பு
30.1.2019 – ஒன்றிய பணியாளர் துறை ரோஸ்டர் முறை ஆணை பிறப்பிப்பு.
1.2.2019 – எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
6.2.2019 – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது.
8.2.2019 – இடைக்காலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
8.9.2022 – உச்சநீதிமன்றத் தலைவமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் அரசியல் சட்ட அமர்வு.
13.9.2022 – உச்சநீதிமன்றத்தில் விவாதம் தொடக்கம்
27.9.2022 – தீர்ப்பு ஒத்திவைப்பு
7.11.2022 – EWS சட்டம் செல்லும் என்று தீர்ப்பு.
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் இடஒதுக்கீடு என்று அரசியல் சட்டம் கூறியுள்ள நிலையில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினருக்கு அவசர கதியில் இடஒதுக்கீட்டைத் திணித்ததுதான் சமூகநீதியா?

No comments:

Post a Comment