மக்களவைத் தேர்தலில் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க ராகுல் காந்தி ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

மக்களவைத் தேர்தலில் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க ராகுல் காந்தி ஒப்புதல்

featured image

புதுடில்லி, மே 12 பத்திரிகையாளர் என்.ராம், மேனாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க தயார் என அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர் பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டில்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அனுப்பியுள்ளனர்.
விவாதம் நடத்துவது தொடர்பாக ராகுல் காந்தி சார்பில் காங்கிரஸ் கட்சி வெளியிட் டுள்ளகடிதத்தில்,”விவாதத்துக்கான அழைப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசித்து. அதன்படி, ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயோ விவாதத்தில் கலந்து கொள் வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில், “பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் என்பதால், பொதுமக்கள் தங்கள் தலைவர் களிடம் நேரடியாகக் கேட்கத் தகுதியான வர்கள். பிரதமர் மோடி எப்போது விவா தத்தில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என் பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அதனைத் தொடர்ந்து விவாதத்தின் விவரங் கள் மற்றும் வடிவம் பற்றி ஆலோசிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், மோடியும், பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களும் விவாதத்தில் பங்கேற் பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின்போது இதுவரை இல்லாத வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலை வர்கள் அனுமானங்களின் பேரில் பல புகார் களை முன்வைத்துள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகார் கூறி வருகிறார். அதேபோல், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இட ஒதுக்கீடுகள் அனைத்தையும் முஸ்லிம் களுக்கு ஒதுக்குவார்கள் என்றும், அயோத் தியின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள் என்றும் பிரதமர் மோடி புகார் கூறியுள்ளார். இந்த வகையில் தொடரும் புகார்கள் அனைத்தும் அனுமானங்களின் பேரில் முன்வைக்கப்படுவதாகக் கருதப்படு கிறது. இவை உண்மையிலேயே சாத்தியமா? என்பதை அறியும் வகையிலும், பொதுமக் கள் சார்பிலான மேலும் பல கேள்விகளுடன் விவாதம் செய்ய இரண்டு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில், மூத்த பத்திரிகையாளரும் `தி இந்து’ நாளிதழின் மேனாள் ஆசிரியருமான என்.ராம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகிய மூவரும் கையொப்பம் இட்டு கடிதம் எழுதியுள்ளனர். அஞ்சல்மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இக்கடிதமானது, நேற்று
(11-5-2024) பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வசிக்கும் அரசு குடியிருப்பில் பெறப் பட்டுள்ளது. இந்த விவாதமானது எந்த சார்பும் இல்லாத வகையிலும், லாபநோக்கம் இல்லாத மேடையில் நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களுக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம், இந்திய குடிமக்கள் எனும் வகை யில் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது குறித்து மூவர் எழுதியுள்ள கடி தத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இடஒதுக்கீடு, அரசமைப்பின் சட்டப் பிரிவு 370 மற்றும் சொத்துகளின் மறுபங்கீடு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக விவா திக்க காங்கிரசுக்கு பொதுவெளியில் பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுதல், தேர்தல் பத்திரங்கள், சீனாவின் நடவடிக்கைகளுக்கான ஒன்றிய அரசின் பதில் நடவடிக்கை ஆகியவை மீது பிரதமர் மோடியிடம் பதில்களை கேட்டதுடன் அவரை பொது விவாதத்துக்கும் அழைத் துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தில் கலந்துகொள்ள இருவராலும் முடியாவிட்டால் அவர்கள் சார்பில் ஒருவரை அனுப்பி வைக்கும்படியும் மூவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் நகலை தனது ‘எக்ஸ்’ தளத் திலும், பத்திரிகையாளர் என்.ராம் நேற்று(11-5-2024) பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவும் வைரலாக தொடங்கி உள்ளது.

No comments:

Post a Comment