வெளிநாட்டுப் படிப்பு - போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் : எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

வெளிநாட்டுப் படிப்பு - போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் : எச்சரிக்கை


சென்னை, மே 26 அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்திருப்ப தாவது:-
பல்வேறு வேலை வாய்ப்பு களுக்காக தமிழ்நாட்டு இளை ஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா, தாய் லாந்து, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர் களை கடுமையாக துன்புறுத்து கிறார்கள்.
இதுவரை மேற்குறிப் பிட்ட நாடுகளில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந் துள்ளது.
அண்மைகாலங்களில் தாய் லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணி என்றும் டிஜிட்டல் சேவை களை சந்தைபடுத்துகின்ற மேலாண்மை பணி என்றும் நமது இளைஞர்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல் களில் ஈடுபட கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இம்மாதிரியாக இளைஞர்களை கவர்ந்து அழைத்து செல்லும் முகவர்கள் துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இம்முகவர்கள் இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்ப பணிக்கென்று மிக எளிமை யான நேர்காணல் வழியாகவும், எளிமையான தட்டச்சு தேர்வு வைத்து தெரிவு செய்வதோடு அதிக ஊதியம் தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி இளைஞர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர். தகவல் தொழில்நுட்ப பணி என்று நம்பி சென்ற இளைஞர்கள் சட்ட விரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ளகோல்டன் டிரயங்கள் (நிஷீறீபீமீஸீ ஜிக்ஷீவீணீஸீரீறீமீ ) என்ற சிறப்பு பொருளாதார மண்டலத் தில் கடுமையான மற்றும் கட்டுப் பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்படுகின்ற னர். தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா (கிக்ஷீக்ஷீவீஸ்ணீறீ ஸ்வீsணீ) வேலைவாய்ப்பை அனுமதிக்காது.
மேலும், அத் தகைய விசாவில் லாவோஸுக்கு வருபவர்களுக்கு லாவோஸ் நாட்டு அதிகாரிகள் வேலைக்கான அனுமதியை (கீஷீக்ஷீளீ றிமீக்ஷீனீவீt) வழங் குவதில்லை. சுற்றுலா விசா, சுற் றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண் டும் என்பது குறிப்பிடத்தக்கது. லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும்.
இதுபோன்ற மோசடி வலை யில் நமது இளைஞர்கள் மாட்டிக் கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வேலைக்கான விசாவின் உண் மைத் தன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் (கீஷீக்ஷீளீ றிமீக்ஷீனீவீt) குறித்து பயணிப்பதற்கு முன் பணி புரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தி யாவிலுள்ள அந்நாட்டின் தூத ரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் நீஷீஸீs.ஸ்வீமீஸீtவீணீஸீஸீமீ@னீமீணீ.ரீஷீஸ்.வீஸீ மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் நீஷீஸீs.ஜீலீஸீஷீனீஜீமீலீலீ@னீமீணீ.ரீஷீஸ்.வீஸீ., ஸ்வீsணீ.ஜீலீஸீஷீனீஜீமீலீலீ@னீமீணீ.ரீஷீஸ்.வீஸீ ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடு களில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமி ழர் நலத்துறையின் கட்டண மில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.
அ) 18003093793 (இந்தியாவிற் குள்)ஆ) 8069009901 (அயல்நாடு களிலிருந்து தொடர்புக்கு) இ) 8069009900 (விவீssமீபீ சிணீறீறீ ழிஷீ.) மேலும் குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலர், சென்னை (றிக்ஷீஷீtமீநீtஷீக்ஷீ ஷீயீ ணினீவீரீக்ஷீணீஸீts, சிலீமீஸீஸீணீவீ) உதவி எண்- 90421 49222 அவர்களையும் தொடர்பு கொள்ளலாம். தமிழ் நாட்டில் ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் / முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவித்துக்கொள்ளப் படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment