சென்னை பெரியார் நகரில் ரூ.110 கோடியில் 6 தளங்களுடன் சிறப்பு மருத்துவமனை : தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

சென்னை பெரியார் நகரில் ரூ.110 கோடியில் 6 தளங்களுடன் சிறப்பு மருத்துவமனை : தமிழ்நாடு அரசு தகவல்

featured image

சென்னை,மே12– தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று அடுக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடம் ரூ.55.07 கோடி மதிப்பீட்டில் கட்ட 3.10.2022- அன்று உத்தரவிட்டு இக்கட்டடம் கட் டுவதற்காக 8.3.2023 அன்று அடிக்கல் நாட்டினார்கள்.
இப்பணிகள் நடைபெற்றுக் கொண் டிருந்த நிலையில் மேலும் கூடுதலாக மூன்று தளங்கள் கட்ட ரூ.54.82 கோடி மதிப்பீட்டிற்கான ஒப்புதல் வழங்கப் பட்டது. கூடுதல் தளங்கள் கட்டும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.3.2024 அன்று அடிக் கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் இப்புதிய மருத்துவமனை கட்டடம் மொத்தம் ஏறத்தாழ 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,12,890 சதுர அடி (19,778 ச.மீ) பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் (நி+6), 556 படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கட்டடம் மிக விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

இந்த மருத்துவமனை கட்டடத்தின் தரைத்தளத்தில் தீவிர சிகிச்சை பிரி வுகள், நவீன சலவையகம், மத்திய கிருமி நீக்கல் துறை, வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இடம் பெறும்.

முதல் தளத்தில் மகப்பேறு வார் டுகள், மறுவாழ்வு வார்டுகள், இரத்த வங்கி, மூன்று அறுவை சிகிச்சை அரங் கங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.
இரண்டு மற்றும் மூன்றாம் தளத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டு, மருத்துவ வார்டுகள், தனி அறைகள் மற்றும் முழு உடல் பரிசோதனை பிரிவு, குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

நான்கு, அய்ந்து மற்றும் ஆறாம் தளங்களில் சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், நீரிழிவு வார்டு, இரை யகக் குடலியவியலுக்கான வார்டுகள், இதயவியல் வார்டுகள், கேத் ஆய்வகம் மற்றும் நான்கு அறுவை சிகிச்சை அரங் கங்கள், புற்றுநோய் வார்டு, கூட்டரங்கம் ஆகியன முழு அறை கலன்கள் வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.

மேலும் இக்கட்டடத்தின் அனைத் துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளி களுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், நான்கு மின்தூக்கிகள், 3 படிகட்டுகள், சாய்வுதளம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு உப கரணங்கள் போன்ற பிற வசதிகளும் அமையக்கூடிய வகையில் இக்கட்டடப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறையின் மூலம் தென்சென்னை பகுதி மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் கிண்டியில் கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையைக் உருவாக்கியுள்ளதுபோல, வடசென்னை மாவட்ட மக்களுக்கும் குறிப்பாக, கொளத்தூர் தொகுதி மக்களுக்கும், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதிகளை அளிக்கத்தக்க மருத்துவ மனையாக அனைத்து மருத்துவ வசதிகளுடனும் கூடியதாக பெரியார் நகர் மருத்துவமனையை மேம்படுத்தி வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிவரும் இத்தகைய மருத்துவ மேம்பாட்டுப் பணிகள் மூலம் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட துறையாகவும் மருத்துவ சேவைகள் வழங்கும் துறை யாகவும் வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதுடன், தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் நலனில் எந்நாளும் அதீத அக்கறை கொண்டு அவர்களுடைய தேவைகளை உடனுக்குடன் நிறை வேற்றி வருவதும் குறிப்பிடத்தக்க தாகும்.

No comments:

Post a Comment