இராணிப்பேட்டை மாவட்டம் - 100, திருவள்ளூர் மாவட்டம் - 50 விடுதலை சந்தாக்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

இராணிப்பேட்டை மாவட்டம் - 100, திருவள்ளூர் மாவட்டம் - 50 விடுதலை சந்தாக்கள்!

featured image

இராணிப்பேட்டை, மே 11- 9.5.2024 அன்று மாலை 5மணிக்கு அரக்கோணத் தில் இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட் டம் தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப் பன் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தின் நோக் கத்தை விளக்கி கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு.இரா. குணசேகரன் உரையாற் றினார்.
இராணிப்பேட்டை மாவட்ட கழகத்தலைவர் சு.லோகநாதன், மாவட்ட ச்செயலாளர் செ.கோபி, பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியக்குமார், மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு, காவேரிப்பாக்கம் ப.க. பொறுப்பாளர் போ.பாண்டுரங்கன், நகர செயலாளர் க.சு.பெரியார் நேசன், ஏ.சு.இராசா, திரு வள்ளூர் மாவட்டத்தலை வர் வழக்குரைஞர் மா. மணி, மாவட்டச் செயலா ளர் கோ.கிருட்டிண மூர்த்தி, மாவட்ட இளை ஞரணி தலைவர் க. ஏ.தமிழ்முரசு,ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கியதுடன் ஒவ்வொ ருவரும் அய்ந்து சந்தாக் கள் சேர்த்து தருவோம் என்று உறுதி கூறி சந்தா புத்தகங்களை பெற்றுக் கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட் டத் தலைவர் அ.வெ. முரளி, செயலாளர் இளையவேல், கிராம பகுத்தறிவு பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன் பழகன் ஆகியோர் சிறப் பாக உரை நிகழ்த்தினர்.
திருவள்ளூர் மாவட் டம் சார்பில் 50, இரா ணிப்பேட்டை மாவட் டம் சார்பில் 100 விடு தலை சந்தாக்கள் வழங்கு வது என தீர்மானிக்கப் பட்டது. இராசா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment