ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 9, 2024

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டி

featured image

புதுடில்லி, ஜன.9 மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன் பாக அரசியல் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரங்களை துவக்கத் தயாராகி வருகின்றன. இவற்றில் முக்கியத் தலைவர்கள் போட்டியும் கூர்ந்து கவனிக்கப் பட்டு வருகிறது. காங்கிரஸின் மேனாள் தேசியத் தலைவரான சோனியா காந்தி (78), கடந்த 2004 முதல் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டு வென்று வருகிறார். முதுமை கார ணமாக பிரச்சாரக் கூட்டங்களை குறைத்துக் கொண்ட இவர், தற்போது தேர்தல் போட் டியில் இருந்தும் விலக விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் எனப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சோனியா காந்தி முதன் முறை யாக கடந்த 1999-இல் கருநாடகாவின் பெல்லாரி மற்றும் உ.பி.யின் அமேதி யில் போட்டியிட்டு வென்றிருந்தார். இதில் பெல்லாரி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய அவர் அமேதி தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியில் தொடர்ந்தார். 2004 தேர்தலில் முதன்முதலாகக் களம் இறங்கிய தனது மகன் ராகுலுக்காக அவர் அமேதியை விட்டுக் கொடுத்தார். பிறகு அருகிலுள்ள மற்றொரு காங்கிரஸ் களமான ரேபரேலிக்கு மாறினார். இந்த தொகுதியில் குறைந்தது 3 லட்சம் வாக்குகளில் வென்று வந்தார். இந்த

வாக்கு வித்தியாசம்

கடந்த 2019 தேர்தலில் 1.67 லட்சமாக குறைந்தது. எனினும் இந்த எண்ணிக்கையும் அதிகம் என்பதால் ரேபரேலியில் ராகுல் போட்டியிடும் வாய்ப்புகள் தெரி கின்றன. கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல், கேரளாவின் வயநாடு மக்க ளவை உறுப்பினரானார். அவர் 3 முறை வென்ற அமேதி யில்ஒன்றிய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார். இதனால் காங்கிரஸுக்கு உ.பி.யில் செல்வாக் கும் குறைந்தது.

எனவே வரும் தேர்தலில் அவர் வயநாட் டுடன் ரேபரேலியிலும் போட்டி யிடும் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.
ரேபரேலி இல்லை என்றால் அதில் சகோதரி பிரியங்காவும், அமேதியில் மீண்டும் ராகுலும் போட்டியிடும் வாய்ப்புகள் உள் ளன. காந்தி குடும்பத்தின் சொந்த மாநிலமான உ.பி.யில் பிரியங்கா வுக்கு ஒரு காலத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது தேர்தல் போட்டிக்கு கட்சியினரின் அழைப்பை பிரியங்கா மறுத்து விட் டார். இந்த முறை அவர், உ.பி.யில் அமேதி அல்லது ரேபரேலியுடன் தெலங்கானாவிலும் ஒரு தொகு தியை தேடி வருவதாக தகவல்கள் வெளியா கின்றன.

தேர்தல் போட்டியிலிருந்து சோனியா விலகினால், உ.பியில் காங்கிரஸ் ஒன்றுமில்லாமல் போகும் அச்சமும் கட்சித் தலைவர் களுக்கு உள்ளது. ஏனெனில், 2009ல் 22 உறுப்பினர்களைப் பெற்ற காங் கிரசுக்கு 2014இ-ல் 2, 2019இ-ல் ஒன்று மட்டுமேகிட்டியது.

இதனால் சோர்வடைந்த உ.பி. காங்கிரஸின் உத்வேகத்திற்காக சோனியாவை போட்டியில் தொட ரச் செய்ய கட்சியில் அழுத்தம் தொடர்கிறது.

No comments:

Post a Comment