சட்டசபைப் பதவி - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

சட்டசபைப் பதவி

ஒருவர் எவ்வளவுதான் சட்டத்தை, சாஸ்திரத்தை வெறுத்தாலும் சட்டசபைக்குப் போனவுடன், சாஸ்திரத்திற்குக் கட்டுப்படுகிறேன் என்று சொல்லி விட்டுத்தான் உட்கார முடிகிறது. 'ஜாதி மதச் சம்பிரதாயங்கள் எல் லாம் தனி மனிதன் உரிமைகள்; அவற்றைக் காப்பாற்றுவதுதான் சுதந்தரம்; இந்தச் சுதந் தரத்தின் (சட்டத்தின்) மூலமாக மக்களுக்கு இவற்றைக் காப்பாற்றுகிறோம்' என்று உறுதி கூறுகிறார்கள். ஆகையால், நாம்தாம் ஏமாந்தவர்கள்; இல்லாவிட்டால் பித்தலாட்டம் பேசகிறவர்கள். எப்படி ஜாதியை ஒழிக்கிறவர்கள் என்பவர்களுக்குக் கடவுள் இல்லையோ - சாஸ்திரம், மதம் இல்லையோ - அதே மாதிரிதான். ஜாதியை ஒழிக்கிறேன் என்கிறவர்களுக்கு அரசாங்கம் இல்லை. 

(நூல்: 'ஜாதி ஒழிப்பு')


No comments:

Post a Comment