இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி வழங்க ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையே! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி வழங்க ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையே!

பிரியங்கா கருத்து

2

போபால், அக்.13 தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத் தப்பட்டோர் ஆகியோருக்கு நீதி வழங்க நாடு தழுவிய ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று பிரியங்கா கூறினார்.

சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார். 

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சமீபத்தில், பீகாரில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றம் பழங்குடி யினர் ஆகியோர் மொத்த மக்கள் தொகையில் 84 சதவீதம் இருப்பதாக தெரியவந்தது.

ஆனால், அரசு வேலைவாய்ப் பில் அந்த சமூகத்தினர் மிகக்குறை வாகவே உள்ளனர். எனவே, அவர் களின் துல்லியமான எண்ணிக் கையை தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு நீதி வழங்கவும் நாடு தழுவிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 

மத்தியப் பிரதேசத்தில் பாரதீய ஜனதாவின் 18 ஆண்டுகால ஆட்சி யில் மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை. தேர்தல் வரும்போதுதான் மக்களை நினைவுபடுத்தி, ஏதேனும் திட்டங்களை அறிவிப்பார்கள். 

எனக்கு முன்பு பேசியவர்கள் என் பாட்டி இந்திராகாந்தி பற்றி குறிப்பிட்டனர். அவரை 'இந்திரா அம்மா' என்று அழைக்கிறீர்கள். இங்கு வந்துள்ள முதியவர்களுக்கு அவரை பற்றிய நினைவு இருக்கும். நான் அவரது பேத்தி. எனது முகத் தோற்றம், என் பாட்டி போல் இருக் கிறது. அதனால் என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள். எனவே, உண் மையை பேச வேண்டும் என்பதிலும், இந்திராவின் பணிகளை முன்னெ டுத்து செல்வதிலும் எனக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. இந் திராகாந்தி செய்த சாதனைகளால் தான் அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர். நீங்கள் அவரை முன்னுக்கு கொண்டு வந்தீர்கள். அவர் உங் களை முன்னுக்கு கொண்டு வந்தார். இதுதான் தலைவருக்கும், மக்களுக் கும் இடையிலான உறவு.

வாக்குறுதிகள்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூ திய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதி கள் நிறைவேற்றப்படும். முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை இலவச கல்வி அளிப்பதுடன், முதல் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத் துக்கு ரூ.500-ம், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1,000-ம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,500-ம் உதவித் தொகை வழங்கப்படும். இதுதவிர, சமையல் எரிவாயு உருளை 

ரூ.500-க்கு விற்கப்படும். பெண் களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். 100 யூனிட்வரை இலவச மின்சாரமும், 200 யூனிட் மின்சாரம் பாதி விலைக் கும் வழங்கப்படும். 5 குதிரை சக்தி வரை கொண்ட நீரிறைக்கும் இயந் திரம் பயன்படுத்தும் விவசாயி களுக்கு இலவச மின்சாரம் அளிக் கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment