தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

தருமபுரி, அக். 1- தருமபுரி மாவட்ட நிம்மாங்கரை கிராமத்தில் கழக இளை ஞரணி சார்பில் மா.செல் லதுரை (மாநில இளைஞ ரணி துணை செயலாளர்) தலைமையில் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாள் விழா நிகழ்வு 17-.9.-2023 அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

இந்நிகழ்வில் நி.சி. மாதேஸ் கிராம நிர்வாக அலுவலர் தோழர்க ளுக்கு இயக்க ஏடுகளை வழங்கியும், மற்றும் தலை மையாசிரியர் மா.சின்ன மாது தோழர்களுக்கு இனிப்புகளை வழங்கி யும், தோழர் வில்கிருஷ் ணன் எழுச்சியான முறை யில் தந்தை பெரியாருக்கு முழக்கங்களை எழுப்பி யும் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கிராமத்திலுள்ள பொது மக்களும், பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவர் களும், மகளிர் தோழர்கள் மற்றும் பொது மக்களும்  பெருந்திரளாக கலந் துக் கொண்டு பிறந்தநாளை யொட்டி சமூக நீதியின் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment