100 வயது தாண்டி ஓய்வூதியம் பெறுபவர்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

100 வயது தாண்டி ஓய்வூதியம் பெறுபவர்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசு

சென்னை, ஆக. 5-  தமிழ் நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் ஓய்வூதியம் பெறக்கூடிய நபர் களை சிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப் பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டில் நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில் ஓய்வூதியம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த ஓய்வூதியத் திட்டங்களு டைய வரலாற்றை நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தோம் என்று சொன்னால், 1962-ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிமு கப்படுத்தப்பட்டிருக் கிறது.

அன்றைக்கு மாதத்திற்கு ரூபாய் 20/-_ அன்றைய சூழ்நிலை யில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு இந்தத் திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.புதிய திட்டம்:

இந்த நிலையில் தமிழ் நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் ஓய்வூதியம் பெறக்கூடிய நபர் களை கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு 107 வயது நிறைவடைந்த ஓய் வூதியர் கோபாலகிருஷ்ணன் அவர்களை நேரில் பாராட்டு தெரிவித்தார். 

கு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மூலமாக 01-.05.-1972 முதல் குடிமை ஓய் வூதியம் பெற்று வருகிறார். 

அவரது ஓய்வூதிய கொடுவை ஆணை எண். கி-69690. ஓய்வூ தியர் பிறந்த தேதி 26.10.1916. அவர் தற்போது 107 வயதை நிறைவு செய்துள்ளார். தமிழ் நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர் களில் கு.கோபாலகிருஷ்ணன் அவர்களே வயதில் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரு வாரிசுகள் உள்ளனர்.

இவர் இரண்டாம் உலகப் போர் (1939_ 1945) நடை பெற்ற காலத்தில் இராணுவத்தில் I.E.M.E படை பிரிவில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக் மற்றும் கனரக வாகன ஓட்டுநராக  Lans Nayak பதவி நிலையில் அய்ந்து வருடங்கள் பணிப்புரிந்துள்ளார். 

அப்போது பர்மா, மணிப்பூர் போன்ற இடங்களில் நடை பெற்ற போரில் பங்கெடுத் துள்ளார். அன்றைய காலக் கட்டத்தில் அய்ந்து பதக்கங் களையும் பெற்றுள்ளார்.

அதன் பிறகு ஒன்றிய அரசுப் பணியில் சில காலம் சுங்கத் துறையில் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து நாகப்பட்டினம், காவல் நிலை யம் திட்டச்சேரியில் காவலராக (Police Constable) பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 

அவர்களை மரியாதை செய் யும் விதமாக நிதி மற்றும் மனி தவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கருவூல கணக்குத்துறை ஆணை யர் க.விஜயேந்திர பாண்டியன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) ரஞ்சித் சிங், ஓய்வூதியர் வசித்து வரும் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர்காணலை மேற் கொண்டதுடன் நேர்காணல் சான்றிதழை அளித்து சிறப்பித் தார்கள்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஓய் வூதியதாரர்களை கவுரவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும் ஓய்வூ தியர்களின் இருப்பிடத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கௌரவிக்க கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment