உத்தரப் பிரதேசத்தில் மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 22, 2023

உத்தரப் பிரதேசத்தில் மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வாம்

வாரணாசி, ஜூலை 22- உத்தரப் பிரதேசம், வாரணாசியில் அமைந்துள்ள கியான் வாபி மசூதியில் தொல்லி யல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ் வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி கடந்த 2021-இல் 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதனை விசாரித்த நீதி மன்றம், கியான்வாபி மசூ தியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. 

இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகா னாவின் நடுவே சிவலிங் கம் இருப்பதாக தெரிவிக் கப்பட்டது. இந்த சூழ லில் கியான்வாபி மசூதி யில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரி 4 இந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட் டது. இந்த மனு மீதான விசாரணையில் இந்துப் பெண்கள் சார்பில் கூறும் போது, “ஆதி விஸ்வேஸ்வ ரரின் கோயில் மீது கியான் வாபி மசூதி கட்டப்பட்டு உள்ளது. இதை உறுதி செய்ய கியான்வாபி மசூ தியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்" என்று வாதிட்டனர்.

கியான்வாபி மசூதி நிர்வாகம் கூறும்போது, “எந்தவொரு வழிபாட் டுத் தலத்தின் மீதும் மசூதி கட்டப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட் டது. இருதரப்பு வாதங் களும் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்தன. இந்த சூழலில் வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 

வாரணாசியின் கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான கள ஆய்வினை நடத்த வேண்டும். ஒசுகானா பகுதியில் மட்டும் ஆய்வு நடத்தக்கூடாது. ஆய்வின்போது மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற் படக்கூடாது. ஆய்வின் போது தொழுகை நடத்த லாம். ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ் வாறு நீதிபதி உத்தர விட்டார்

No comments:

Post a Comment