தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நிதிநிலை அறிக்கை' நாளை தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நிதிநிலை அறிக்கை' நாளை தாக்கல்

சென்னை மார்ச் 19- சட்டப்பேரவையில் 2023-2024ஆ-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய் கிறார்.

பேரவையின் இந்த ஆண்டுக் கான முதல் கூட்டம் கடந்த ஜன.9-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழ்நாடு அர சின் 2023-2024ஆ-ம் நிதி ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை (20.3.2023) தாக்கல் செய்யப்படுகிறது. இதை மின்னணு வடிவில் (‘இ-பட்ஜெட்’) நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

இதன்பிறகு, பேரவைத் தலை வர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிக ளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். நிதிநிலை அறிக்கை மீதான விவா தத்துக்காக பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும்.திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021ஆ-ம் ஆண்டு முதல் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. அதன்படி, வேளாண் நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன் னீர்செல்வம் 21ஆ-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

இதைத் தொடர்ந்து, 23, 24, 26, 27-ஆம் தேதிகள் என 4 நாட்களுக்கு பேரவைக் கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது, நிதிநிலை அறிக்கை மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும். உறுப்பி னர்களின் விவாதத்துக்கு, நிறைவு நாளில் நிதி அமைச்சர் பதில் அளிப்பார். மேலும், இந்த நிதி ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளையும் நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார்.

பேரவைத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், திமுக தேர்தல் அறிக் கையில் அறிவிக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுதவிர, பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே நடைமுறை யில் உள்ள பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் நடைபெற்ற ஆலோச னைக் கூட்டங்களிலும், நிதி மேம்பாட்டுக்கான பல்வேறு புதிய திட்டங்கள், வழிமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment