சீர்காழி, நவ. 14- மின்வாரியத் துறையில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார்.
மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தை நேற்று (13.11.2022) ஆய்வு செய்த தமிழ்நாடு மின்சாரம் மற் றும் ஆய தீர்வை அமைச் சர் வி.செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கன மழை பெய்துள்ளது. இத னால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மயிலா டுதுறை பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் கடந்த மூன்று நாட்களாக தங்கி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரு டன், பாதிக்கப்பட்ட பகு திகளில் நிவாரணப் பணி களை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட் டத்தில் 2,620 மின்மாற்றி களில், 1,984 மின்மாற்றிக ளில் சீரான மின்விநியோ கம் வழங்கப்பட்டு வருகி றது. 370 மின்மாற்றிகளில் பழுதடைந்துள்ளது. இதில் 163 மின்மாற்றி அமைந்துள்ள பகுதிக ளில் மழைநீர் சூழ்ந்துள் ளது. 200 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. அதில் 120 மின்கம்பங்கள் புதிதாக மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. சேதம டைந்த 80 மின் கம்பங்கள் மாற்றி அமைத்து இன்று (நேற்று) இரவுக்குள் மின் விநியோகம் வழங்கப் படும். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்க ளில் இருந்து 354 பணியா ளர்கள் வரவழைக்கப் பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள 50,000 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முதலமைச்ச ரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிரப்பப்படும். தமிழ்நாட்டில் 14 ஆயி ரத்து 400 மின்மாற்றிக ளும், இரண்டு லட்சம் மின் கம்பங்களும் இருப் பில் உள்ளது. மழையால் சேதம் அடைந்த மின் மோட்டார்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயி களுக்கு இழப்பிடு வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். மின்மாற்றிகள் பழுதானால் அதனை எடுத்து செல்ல விவசாயி களிடம் பணம் வாங்கி னால், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். தமிழ்நாடு முதல மைச்சர் தொடர்ந்து எங் களை தொடர்பு கொண்டு மழை சேதப் பணிகள் குறித்து கேட்டு அறிந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment