புரட்சிக் கவிஞரின் வேண்டுகோள் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

புரட்சிக் கவிஞரின் வேண்டுகோள்

4

முக்கியமாக தமிழ்ப்பெருமக்களுக்கு நான் சில வேண்டுகோள் விட ஆசைப்படு கிறேன். முதலாவ தாக பெரியார் கொள்கை ஒன்றுதான் நாட்டிற்கு ஏற்றது. உண்மையாக மக்களின் நன்மைக்கு பாடுபடுவது - காரணம் இக்கட்சி தேர்தல் கட்சியல்ல. ஓட்டுக்கேட்கும் கட்சியல்ல. எனவே ஆங்காங்கு கழகம் இல்லாத ஊர்களில் கழகம் அமைக்கவேண்டும். எல்லாத் தமி ழர்களும் தமிழர்களுக்குப் பிறந்த தமிழர் களும் தி.க.வில் உறுப்பினராக வேண்டும்.

இரண்டாவதாக ‘விடுதலை’ பத்திரி கையை ஒவ்வொருவரும் அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும். மற்ற பார்ப்பன ஏடுகளை மறந்தும் எவரும் வாங்கக்கூடாது. அவை நமக்கு துரோகம் இழைப் பவை யாகும். தமிழர்களுக்காக, தமிழர்களின் கல்வி - உத்தியோக நியமனத்துக்காகப் பாடுபடும் ஏடு ‘விடுதலை’ ஒன்றுதான். எனவே ‘விடுதலை‘யை அனைவரும் ஆதரிக்கவேண்டும்.

மூன்றாவதாக குடிஅரசு’, ‘விடுதலை’ மற்றும் பகுத்தறிவு வெளியீடுகளான பார்ப் பன பித்தலாட்டங்களை விளக்கும் நூல்க ளும் மற்றும் பல நூல்களும் மலிவு விலை யில் விற்கப்படுகின்றன. அதனை வாங்கி யாவரும் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்கச் செய்ய வேண்டும்.

(10.5.1958 சனியன்று மண்ணச்சநல்லூரில் லால் குடி வட்ட 

ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆற்றிய உரை)

(“விடுதலை” 18.5.1958)

No comments:

Post a Comment