சென்னை,அக்.31 தமிழகத்தில் புதிதாக 2,608- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,22,011- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 723- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றில் இருந்து நேற்று (30.10.2020) ஒரே நாளில் 3,923- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்புடன் 23, 532- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment