குஷ்வந்த் சிங் கூறும் மகிழ்வான வாழ்வும் - மரணமும்! (1) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

குஷ்வந்த் சிங் கூறும் மகிழ்வான வாழ்வும் - மரணமும்! (1)

.com/img/b/R29vZ2xl/AVvXsEg6ASFRulPvycADEj4c8QKo1870c6xIL9mYAW5c5XJquRVKX14mx58GtG7Qhz593XAO1qwui8noMgqIlqp8bne53Deh3cOv9O_q3b3YZHGBnhQlOuFb73kT17ucJ3yUbGCZ7hZ9hSqx8no/


நண்பர் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் பலருக்கும் பயன்படும்படி பல முக்கிய தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்புவார்கள்.


அண்மையில் பிரபல எழுத்தாளரும், கருத்தாளருமான குஷ்வந்த் சிங் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை - "மகிழ்ச்சியுடன் வாழ்வதும் மறைவதும் எப்படி?" என்று அவரது கண்ணோட்டத்தில் பல ஆண்டு களுக்கு முன் எழுதிய அருமையானதொரு சிறு கட்டுரையை அனுப்பினார்.


இதனை பலரும் படித்துப் பயனுற வேண்டும்.


பல பேருக்கு வாழ்க்கை என்பது பெரிய சிக்கலாகவும், எல்லையற்ற தேடலும், கிடைக்காதவற்றைப் பற்றி பிறகு நினைத்து நினைத்து வாடுவதும்தான் மிச்ச சொச்சமா கிறது!


குஷ்வந்த் சிங் அவர்கள் தமது கண் ணோட்டத்தில் சிறப்பாக வாழ்தலும், மகிழ்ச் சியாக மறைதலும் ஒவ்வொருவருக்கும் எப்படி இருந்தால் பெரிதும் சாத்தியமாகும் என்பதை விளக்குகிறார்.


.com/img/b/R29vZ2xl/AVvXsEhVA_9vsHm9Al6RUrptaNciL4p-RptLQX1ikjjPsFofFzk_1zNBMl5d220De2cOfMjMx0xrzNonOn94quNdMqXYYIk6svd4FlCeHEMXqEj4C1G-0cBQabMqYqTsZxmk5HYvb8ZAgPBUNF8/



  1. முதல் தேவை: அடிப்படையானது நல்ல உடல் ஆரோக்கியமாகும். நாம் சிறு வயதில்கூட படித்தாலும் வாழ்க்கை என்று வரும்போது மறந்து விடுகிறோமே! அந்த 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - ஆரோக்கியம்' (Health என்பதற்கு இப்போது விரிவான பொருள் பிறருக்கு, சமூகத்திற்கு உதவிடும் தொண்டும் உள்ளடக்கமாகும்). உடலில் எந்த சிறு உபாதை, நோய் இருந்தா லும் அது நம் மகிழ்ச்சியை வெகுவாகப் பறித்து விடுகிறது அல்லவா? நமது முக்கியமான முதல் கவனம் உடல் நலப் பாதுகாப்பில்தான் இருக்கவேண்டும். நல்ல உடல் நலம் நல்ல மனவளத்தையும் கூடத் தருவதை நாம் ஒவ்வொருவரும் மகிழ்வோடு அனுபவித்து வருகிறோம் அல்லவா?

  2. நிதி கையிருப்பு: போதிய அளவுள்ள ஆரோக்கியமான நிதி கையிருப்பு - சேமிப்பு (வங்கிக் கணக்கு இருப்பு - Bank Balance) அது கோடிக்கணக்கில் இருக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். அவரவரின் அடிப்படை செலவுகளை ஏற்கக்கூடியது - குறைந்தபட்ச வசதிகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல், வெளியே செல்லுதல், உண்ணு தல், குடும்பத்தோடு விடுமுறைகளில் சுற் றுலா செல்லுதல் போன்றவற்றுக்கும் - பொழுது போக்குகளுக்கும் தேவையான அளவு நிதி இருப்பு.


இதனை கடன் வாங்கி நடத்தினால், அதுவே பிறகு பெரும் சுமையும், துன்பமாக வும் மாறிவிடக்கூடும்; மற்றவர் முன் நாம் சுயமரியாதை இழந்தவர்களாகவே ஆகி விடக் கூடும் கடன் வாங்கி வாழும் வாழ்க்கை முறையினால். போதுமான அளவு - தமது தேவைகளுக்கேற்ற இருப்புத் தொகையிருந் தால் அதுவே தன்னம்பிக்கை - மனதில் மகிழ்ச்சியையும் தரும்.



  1. சொந்த வீடு: குருவிக்குக்கூட கூடு உண்டு. மனிதர்களுக்கு ஏனோ போதிய வீடு இல்லை! அவர்கள் சொந்த வீட்டில் இருந் தால் அது தரும் மகிழ்ச்சியே அலாதியானது. ஒரு வகை பாதுகாப்பும் ஆனது! அந்த வீடு கூட சிறிய தோட்டத்தோடு - செடிகள் நட்டு, தோட்டத்தில் பூக்கள் பூக்கவும், அதைக் கண்டு மகிழ்ச்சி அடையவும், நமது மரத்தில் பழுத்த பழம் - நமது செடியில் காய்த்தவை என்று பறித்து உண்ணுவதும், பூக்களின் அழகை சுவைத்தும், தனி மகிழ்ச்சியை அதன் சொந்தக்காரருக்கு அவை தருவ தினால், மன அழுத்தம் பறந்தே போகும்; செடியும், கொடியும், பச்சைப் புல்லும் பசுமை யோடு நம் மனதைக் குளிர்விக்கும் - என்கிறார் குஷ்வந்த் சிங்.

  2. பெரிய வாய்ப்பு: அத்துடன் புரிதலுள்ள வாழ்விணையர் - நண்பர் உற்ற நண்பர் - தோழமையுடன் உள்ள இணை! இது மிகப் பெரிய வாய்ப்பு.


அடிக்கடி சண்டைபோட்டும், மாறுபட்டும், சதா ஒத்துப் போகாத வாழ்விணையுடன் வாழ்வதைவிட, மண விலக்குப் பெற்று நிம்மதியை, "வாங்குவதே" மிக முக்கியமான வாழ்க்கை என்றும்,  அவர் பளிச்சென்று உறுதியாக்கவில்லை.மன அமைதி, மகிழ்ச்சி எங்கே இல்லையோ அதிலிருந்து விடுதலை பெற ஏன் தயக்கம்? என்று சம்மட்டி அடி அடிக்கிறார். நியாயம்தானே!



  1. பொறாமை கொள்ளாமை: எவரைப் பார்த்தும் பொறாமைப்படாத வாழ்வு - முக்கியம். நம்மைவிட அவர் நிறைய சம்பாதித்துவிட்டாரே, அவர் நம்மைவிட பெரிய பதவிக்குப் போய்விட்டாரே, அவ ருக்கு எவ்வளவு செல்வாக்கு? எவ்வளவு பெருமை, புகழ் நமக்கு இல்லை என்றெல் லாம் நினைத்து ஏங்கி புழுங்கிய மனம் கொள்ளாதீர்கள். அது உங்கள் மகிழ்ச்சியை அறவே பறித்திடும். கவனம்! கவனம்!!


'அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்' என்றபடி, பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதாலும், தானும் அப்படி இல்லையே என்று ஏங்குவதால், புழுங்குவதால், உள்ள மகிழ்ச்சியும் பறந்தே போகும் அல்லவா?


"பறப்பதை எண்ணி இருப்பதை இழப் பது" எவ்வகையில் புத்திசாலித்தனம்?


(நாளையும் தொடரும்)


No comments:

Post a Comment