2020-2021ஆம் ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

2020-2021ஆம் ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்

 முதல்-அமைச்சருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



சென்னை, மே 24-- மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக் கடியை கருத்தில் கொண்டு 2020-21ஆம் ஆண்டுக்கான புதிய வரவு-செலவு திட்டத்தை (பட்ஜெட்) தாக் கல் செய்ய வேண்டும் என்று தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-


கடந்த 14.2.2020 அன்று சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2020-21 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் அதன் மதிப்பீடுகள், ஒதுக்கீடு கள் எல்லாம் உருவிழந்து, கரோனா பேரிடரால் அதன் காரணமாக ஏற் பட்டுள்ள மிகப்பெரும் பின்னடைவு களால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ் நாட்டின் நிதி நிலைமை இருக்கிறது. இதனை அ.தி.மு.க. அரசோ, அதன் நிதியமைச்சரோ, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ இன்னும் புரிந்து கொள்ளாதது கவலையளிக் கிறது. வேடிக்கையாகவும் இருக்கிறது.


நிதிப்பேரிடர்


வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, வரலாறு காணாத கடன் ஆகியவற்றின் கடும் பிடியில் மாநிலத்தை அ.தி.மு.க. அரசு சிக்க வைத்திருந்ததால் தற்போதைய கரோனா அதை மேலும் சிக்கலாக்கி நிதிப்பேரிடரை உருவாக்கி, தலை கீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. இழந்த வரி வருவாயும் சீரழிந்த நிதி நிலைமையும் மேலும் கவலைக் கிடமாகி நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் உயிர் பிழைக்குமா, இல்லையா என்ற நிலையில் இன்றைக்கு அவசர சிகிச் சைப் பிரிவில் (அய்.சி.யு.) இருக்கிறது. தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும், விவசாயத் தொழி லாளர்களும் அனைத்து வருவா யையும் இழந்து வெறுங்கையராய் இருக்கிறார்கள்.


மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 22.21 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 60 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடந்ததால், 1.42 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டார்கள். 35 லட்சத் திற்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சோதனைச் சாக ரத்தில் மூழ்கி வெளியே வர முடியாமல் திணறி நிற்கிறார்கள். இந்நிலையில் விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி, விவசாயம் செய்வதற்கு குறைந்தபட்ச மூலதனம், சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங் களை மீட்பது, ஒவ்வொரு குடும்பத் திற்கும் உடனடி பண நிவாரணம் அளிப்பது, மிக முக்கியம். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியிலும் அ.தி.மு.க. அரசு முனைப்பு காட்டுவ தாக தெரியவில்லை.


புதிய வரவு-செலவு திட்டம்


இந்நிலையில், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மாநில அரசின் நிதி நிலைமை என்று திரும் பும் திசைகளில் எல்லாம் சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கும் அ.தி.மு.க. ஆட்சியில், ஏற்கெனவே 2020_21ஆம் ஆண்டுக்கு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கை, முற்றாக தோல்வி கண்டு விட்டதால், நிச்சயம் மறுபரிசீலனை செய்திட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.


கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் முழுவதையும் மாற்றி அமைப்பது உள்ளிட்ட விசாரணை வரம்புகளுடன், ஏற்கெனவே ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையில் கடந்த 9ஆம் தேதி ஓர் உயர்மட்டக் குழுவினை அ.தி.மு.க. அரசு அமைத் திருக்கிறது என்றாலும், அந்த உயர் மட்டக்குழுவிடம் இடைக்கால அறிக்கை எதையும் அரசு கோர வில்லை.


3 மாதங்களுக்குள் அந்த குழு அறிக்கை அளிக்கலாம் என்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அந்த அறிக்கை கிடைக்கப்பெற்று அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்குள் 2020-21ஆம் நிதியாண்டின் 4 அல்லது 5 மாதங்கள் வீணாகி விடும். ஆகவே மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற் பட்டுள்ள இந்த நெருக்கடியை கருத் தில் கொண்டும், பல தரப்பட்ட மக் களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பினை கவனத்தில் வைத்தும், 2020-21ஆம் ஆண்டுக்கான புதிய வரவு-செலவு திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த கட்டாயத் தைத் தட்டிக் கழித்துவிட முடியாது என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தக்க காலத்தே உணர்ந்து, தாமதியாமல் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment