அனைத்து பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 5, 2020

அனைத்து பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும்

உயர்நீதிமன்றத்தில் வழக்கு



சென்னை, ஜூலை 5- தமிழகம் முழுவதும் உள்ள பொறியி யல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகள் உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்பு களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை கொளத் தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆனந்த், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவில், “பள்ளி, கல்லூரிகள் கரோனா தனி மைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போதைக்கு பள்ளி, கல் லூரிகள் திறக்கப்படுவதற் கான வாய்ப்புகள் இல்லை. தற்போதைய சூழலில் கரோனா பாதிப்பு செப் டம்பர் மாதம் தான் தணியும் எனவும், பள்ளி, கல்லூரிகள் 2021ஆம் ஆண்டு ஜனவரி தான் திறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.


இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகி விடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்தி ருக்கவேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.


தேர்வு நடத்துவது தொடர் பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்க ளும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதாலும் தற்போதைக்குத் தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து, ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண் டும். இறுதி பருவத் தேர்வு நடத்தத் தடை விதிக்க வேண் டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment