'தினமலர்' - 24.5.2020 பக்.6
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்லலாம் - அல்லது சங்கராச்சாரியாருக்கும் கசாப்புக் கடைக்காரருக்கும் கை குலுக்கல் என்றுகூட சொல்லலாம் போல் தோன்றுகிறது.
தலைவர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் அறிக்கை விடத்தான் செய்வார்கள். அதிலும் 'நீட்' என்றால் திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை விடாமல் இருப்பாரா? அதுவும் ஒவ்வொரு நாளைக்கும் மத்திய பிஜேபி அரசு ஒவ்வொரு அறிக்கை என்றால் அடி பலமாகத்தான் விழும்.
'நீட்'டைப்பற்றி அல்லவா எழுதி விட்டார் - தினமலர் பூணூலுக்கு ரத்தம் கொதிப்பேறத்தான் செய்யும்.
ஊரடங்கு கூட்டம் போட்டாயிற்று. எல்லா மதக் கோயில்களும் மூடப்பட வேண்டும் என்றும் அரசு ஆணை பிறப்பித்து விட்டது. கோயிலைத் திறக்க வேண்டும் என்று ஏன் நீதிமன்றத்திற்கு ஓடுகிறார்கள்?
திருப்பதி லட்டு என்று டூப்ளிக்கேட்டில் மும்பை வரை சென்று விற்கிறார்கள்? இன்னும் கேள்வி உண்டு. தினமலரே; தினவெடுத்துத் திரியாதே.
No comments:
Post a Comment