ஜோதிராவ் பூலே பேசுகிறார்
இன்று ஆங்கிலேயர் ஆட்சி நடந்து வருகிறது. நாளை இது இல்லாமல் போகலாம். இது நீடித்திருக்காது. இது நிலைத்திருக்கும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. ஆனால், இந்த ஆட்சி நீடித்திருக்கும் காலம் வரையில், தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெற்றுக் கொள்ள முடியும். அதன்மூலம் தங்களை அறியாமையில் முடக்கி வைத்திருந்த - தங்களது சமூக. தனிநபர் கவுரவங்களைப் பறித்துக் கொண்ட - பார்ப்பனர்களின் அடிமை நுகத்தடியிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளலாம்.
(தனஞ்செய்கீர் எழுதிய
‘‘மகாத்மா ஜோதிராவ் பூலே''
பக்கம் 119)
தந்தை பெரியார் பேசுகிறார்
Speaking at a public meeting at salem, E.V. Ramaswami Naicker said they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called "Brahminocracy"
(A HUNDRED YEARS OF THE HINDU Page No : 337)
சேலம் பொதுக்கூட்டத்தில் பெரியார் இவ்வாறு பேசினார். வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடக்கும் இக்காலக் கட்டத்திலேயே பார்ப்பனர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், பார்ப்பனர் அல்லாதார் பார்ப்பனர்களின் ஆதிக்க நுகத்தடியின் கீழ் கிடந்து உழல வேண்டியதுதான்.
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்
‘‘சுதந்திர இந்தியா ‘இந்து ராஜ்ஜியமாகவே இருக்கும். பார்ப்பனர்களும், பனியாக்களுமே ஆதிக்கம் செலுத்துவர், நமக்குச் சுதந்திர இந்தியா மட்டும் போதாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் அது இருக்க வேண்டும்.
(டாக்டர் அம்பேத்கர்
தொகுப்பு நூல்
- பக்கம் 423-தொகுதி 16)
- மயிலாடன்
No comments:
Post a Comment