50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா : உலக சுகாதார நிறுவனம் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா : உலக சுகாதார நிறுவனம் உறுதி


 மாஸ்கோ,  மே 25 உலகமெங்கும் இருந்து 50 லட்சத்துக்கும் அதிகமா னோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது.


இந்த நிறுவனம் நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கையில், “உலகளவில் கரோனா வைரஸ் 51 லட்சத்து 3 ஆயிரத்து 6 பேருக்கு பாதித்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) முடிந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 536 பேருக்கு கரோனா வைரஸ் புதிதாக பாதித்துள்ளது.


இதேபோன்று 24 மணி நேரத்தில் 5,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந் துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 401 ஆக உயர்ந்து உள்ளது” என குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், உலகிலேயே அதிகளவில் வட, தென் அமெரிக்காவில் 20 லட் சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உள்ளது, 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட் டவர்களுக்கு இந்த பாதிப்பு உறுதி செய் யப்பட்டுள்ளது, அய்ரோப்பாவில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment