தொழிலாளர் பற்றாக்குறை உள்ளூர் மக்களுக்கு வேலைதர ஆணையம் அமைத்த அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

தொழிலாளர் பற்றாக்குறை உள்ளூர் மக்களுக்கு வேலைதர ஆணையம் அமைத்த அரசு


மும்பை, மே 23- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை மகாராட்டிரா அரசு அமைத்துள்ளது.


புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வெளியேறுவதால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை ஆராய, தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைக்க மகாராட்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.


மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள பசுமை மண்டலங்களில் திறக் கப்பட்டு வரும் தொழிற்சாலைகளில் ஏற்படும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளூர் மக்களுக்கு அழைப்பு விடுத்த சில நாட்களிலேயே மகா ராட்டிரா அரசு, வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


இதுகுறித்து மகாராட்டிர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த பணியகம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், இதற்கு தொழில்கள், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய மூன்று துறைகளிடையே ஒத்துழைப்பு தேவைப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியகம், பணிக்கு ஏற்றபடி பணியாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள் ளும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


“கரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். அவர்கள் மீண்டும் பணிக்கு வர மாட்டார்கள் என்றும் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள் ளதாகவும், திறமையான மற்றும் திறமையற்ற இரு பிரிவுகளிலும் உள்ள பற்றாக்குறையை பூர்த்தி செய்ய ஒரு புதிய தொழிலாளர் குழு அமைக்கப்பட உள்ளது என்றும் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறினார்.


No comments:

Post a Comment