தமிழ்நாட்டின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

தமிழ்நாட்டின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மரணம்


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத் திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி சமஸ் தானம் 1,000  ஆண்டுகள் வரலாறு கொண்ட தாகும். இதன் 32ஆவது பட்டத்துக்காரர் நல்லகுத்தி சிவசுப்பிர மணிய கோமதி சங்கர ஜெயதியாக முத்து சண்முக சுந்தர முருக தாஸ் தீர்த்தபதி (வயது 92). இவர் நேற்று  முந்நாள் (24.5.2020) மரணம் அடைந்தார். தமிழகத்தில் மன்னராட்சி காலத்தில் முடி சூட்டியவர்களில் கடைசி ராஜா இவராவார். 1952 ஜமீன் ஒழிப்பு சட் டத்திற்கு முன்பாக தனது 3 வயதில் அரிய ணையில் இவர் அமர்ந்தார்.


அவரது உடல் சிங்கம்பட்டி அரண்மனையில் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் இறுதி மரியாதைக்குப் பிறகு  நேற்று (25.5.2020) அவரது உடல் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 'பொது மயானத்தில்' தகனம் செய்யப்பட்டது. கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்காக இந்த ஜமீன் குடும்பம் அப்பகுதி மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment