கரோனா நோய்த் தடுப்பில் தனது தோல்வியை திசை திருப்பும் கபட நாடகங்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதற்கு தி.மு.க. தயங்காது : தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 24, 2020

கரோனா நோய்த் தடுப்பில் தனது தோல்வியை திசை திருப்பும் கபட நாடகங்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதற்கு தி.மு.க. தயங்காது : தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!


சென்னை,மே24 தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று (23.5.2020) விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


தமிழகத்தின் மற்ற மாவட் டங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே முதலமைச்சராக இருப்ப வரைப் போலச் செயல்படும் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள், இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்துள் ளார். சென்னையில் ஏதாவது ஆய்வு செய்வார், அதைவிட்டால் சேலத் தில் ஆய்வு செய்வார். உருப்படியான செயல் திட்டம் இன்றி, ஆய்வு செய்வதால் மட்டுமே கரோனா அகன்று ஓடிவிடும் என்று மனப் பால் குடிக்கிறார். வழக்கம் போல் சேலத்துக்கு கரோனா குறித்து ஆய்வு நடத்தச் சென்ற திரு. பழனிசாமி சற்று அதிகமாக வாய் நீளம் காட்டியிருக்கிறார்.


கடந்த முறை சேலம் சென்றவர், என்னைக் குறித்து, 'அவர் என்ன டாக்டரா?' என்று கேட்டார். இன்றைய தினம் சேலம் சென்றவர், திரு. ஆர்.எஸ்.பாரதியை, 'அவர் என்ன விஞ்ஞானியா?' என்று கேட்டுள்ளார். இப்படி எல்லாரையும் பார்த்துக் கேள்வி கேட்கும் பழனிசாமியை, 'இவரெல்லாம் ஒரு முதல் வரா?' என்று மக்கள் ஒரே குரலில் கேட்டுக் கொண் டிருப்பது, அவரது காதில் விழுந்ததாகத் தெரிய வில்லை!


தி.மு.க. அமைப்புச் செய லாளரும், மாநிலங் களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞரு மான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களை நள் ளிரவில் கைது செய்தது தமிழகக் காவல்துறை. 100 நாட்களுக்கு முன்னால் பேசிய ஒன்றை எடுத்துக் கொண்டு, நேற்றைய தினம் அவசரம் அவசரமாகக் கைது செய்கிறார்கள் என்றால், என்ன காரணம்?


நேற்றுத்தான் இந்த அரசாங்கத்தின் 200 கோடி மதிப்பிலான ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அதன்மீது நடவடிக்கை தேவை என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் விளக்கமாகப் புகார் செய்துள்ளார் திரு. ஆர்.எஸ்.பாரதி.


அ.தி.மு.க. அணிந்திருக்கும் முகமூடி கிழிகிறதே என்ற ஆத்திரத்தில், பழிவாங்கும் நோக்கில், உடனே அவரது வீட்டுக்கு காவல் துறையை அனுப்பி இருக்கிறார் எடப்பாடி திரு. பழனிசாமி; அதுதான் உண்மை.


எடப்பாடி திரு. பழனிசாமி மட்டு மல்ல; அவரது 'அம்மா' மீதே 'டான்சி' நிலபேர ஊழல் வழக்குப் போட்டு, ஆட்டம் காண வைத்தவர் திரு ஆர்.எஸ்.பாரதி.


'திரு. ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று முதல மைச்சர் சொல்லி இருக்கிறார். அப்படியா னால் அவரைக் கைது செய்தது ஆந்திர காவல்துறையா?


கைது செய்திருப்பது தமிழகக் காவல் துறை என்றால், அரசுக்குச் சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?


காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?


கைது நடவடிக்கைக்கும், இவருக்கும் சம்பந்தம் இல்லையாம்; முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு, பதிலைப் படிக்கிறார். கேழ்வரகில் நெய் வடிகிறதாம்; கேட்டுக் கொள்ளுங்கள்! ஏற்கெனவே இது குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருப்பது இவருக்குத் தெரி யாதா? யாரும் இவருக்குச் சொல்லவில்லையா?


கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கத் தவறிய கொடுஞ்செயலை - தோல்வியை, ஜமுக் காளத்தால் போர்த்தி மறைக்கவும், பாதிக்கப் பட்ட மக்களையும், பதற்றத்தில் இருக்கும் மக்களைத் திசை திருப்பவும், தன்மீது மக்கள் மன்றம் சுமத்திவரும் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், இந்தக் கைது நாடகங்களை நடத்துகிறார் எடப்பாடி திரு. பழனிசாமி.


“தமிழ்நாடே ஸ்தம்பித்திருக்கிறது” என்ற வாய்மையை, வாய் தவறி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். உண்மை தானே! அச்சத்திலும், பீதியிலும் தமிழகம்’ ஸ்தம்பித்து’த் தான் இருக்கிறது.


பழங்குடிச் சிறுவனைச் செருப்பு தூக்கச் சொன்ன அமைச்சரைக் கண்டிக்க முடியாத, பெண் நிருபர்களைக் கொச்சைப்படுத்திய சிரிப்பு நடிகரைக் கைது செய்ய முடியாத, உயர்நீதிமன்றத் தையும், காவல் துறையையும் நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்து அவதூறு செய்தவரைப் பிடிக்க முடியாத, ‘மண்புழு’ முதலமைச்சர், பட்டியலின மக்களைக் காக்கத் தோள் தட்டிப்  புறப்பட்டுள் ளதாக, பகல் வேடம் போடுவது  வேடிக்கையானது; வினோதமானது!


எடப்பாடி திரு. பழனிசாமி, தமது வீட் டுக்கு எதிரே குடியிருந்த காவலர் பழனிசாமி குடும்பத்தை, ஜாதிவெறி கொண்டு என்ன பாடு படுத்தினார் என்ற கதைகளை முதல்வர் மறந்திருக்கலாம்; நாடு மறக்கவில்லை!


திசை திருப்பும் தீய நோக்கத்துடன், கபட நாடகங்கள் எத்தனை நடத்தினா லும்; மக்கள் மன்றத்தில் எடப்பாடி திரு. பழனி சாமியின் அடுக்கடுக்கான ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்து வதற்கு, திராவிட முன்னேற் றக் கழகம் எப்போதும் தயங்காது; தயாராகவே இருக்கும்!


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment