"பிறப்பால் தான் - குணத்தால் அல்ல" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

"பிறப்பால் தான் - குணத்தால் அல்ல"

- காஞ்சி சங்கராச்சாரியார்



"ஜாதி வித்யாஸமே இல்லை - பகவான் சொல்ல வில்லை; ஆனால், பிறப்பின்படி இன்றி, குணத்தின் படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத்தான் சொல்கிறார். 'சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச:' என்றே சொல்கிறார் என்கிறார்கள்.


சரி, ஆனால், எத்தனை வயசுக்குமேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராம் மணனின் தொழிலை எடுத்துக்கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வரு ஷங்களில் தன் தொழிலுக்கான வற்றைப் படித்து விட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ண வும், பிறருக்குப் போதிக்க வேண் டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் form ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு)தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக்கொண்டு தொழிலுக்கு போகும்போதும் சமூகத்துக்கு அவ னால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக் கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசி யிருப்பாரா?



அப்படியானால் அவர் 'தியரி'யில் (கொள்கையளவில்) குணப்படி தொழில் என்றாலும், 'ப்ராக்டிஸில்' (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா? என்றால், பாலிடீஷி யன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.


சரி அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? "நான் யுத்தம் பண்ண மாட்டேன்; பந்துமித்தரர்களின் ரத்தத்தைச் சிந்தி சாம்ராஜ் யாபிஷேகம் பண்ணிக் கொள்வதைவிட, ஆண்டிப் பரதேசியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்தனையோ மேல்'' என்று சொல்லிக்கொண்டு தேர்த் தட்டில் உட்கார்ந்து ஸ்த்யாக்ரஹம் பண்ணி விட்ட, அர்ஜூனனிடம் அவர் என்ன சொன்னார்? "நீ க்ஷத்ரிய ஜாதியில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவது தான் உன் ஸ்வதர்மம். எடுவில்லை - போடு சண்டையை'' என்றுதான் அவனைவிடப் பிடிவாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.


அப்படியானால் தர்ம புத்திரரின் விஷயம் என்ன? சண்டையே கூடாது. சமாதானமாகவே போய்விடவேண்டும் என்று தானே அவர் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறார்?.... அவரையும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத் தான் அநுஷ்டிக்கப் பண் ணினார் என்றால், அவர் ''ஸ்வதர்மம்'' என்கிறபோது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்றுதான் அர்த்த மாகும். பிராமணராகப் பிறந்தும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச் சாரியார் மாதிரியானவர்கள் பெரிய வர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் இவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகக் குத்திக்காட்டிப் பேசிய போதெல் லாம் பகவான் ஆக்ஷேபித்த தில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகிற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால், ஏன் 'குணகர்ம விபாகச:' என்றார் என்றால்,


இந்த ஜாதி தர்மமே தான் உள்ளூர அவரவரின் குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றே தான்; ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று வெவ்வேறு விஷயங்களைச் சொல்கிற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை.''


- காஞ்சி சங்கராச்சாரியார்


சந்திரசேகரேந்திர சரஸ்வதி


"தெய்வத்தின் குரல்" நூல் - முதற்பாகம் - பக். 1001-1003.


No comments:

Post a Comment