தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்!

சைவர்களை மிரட்டிய பெரிய புராண எதிர்ப்பு



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.


அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...


- ஆசிரியர், 'விடுதலை'


 


“இந்த விடுதலை விழாக் கொண்டாட்டத்தைக் கொண்டாடும்படி நானே ஓர் அறிக்கைவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்காகப் பல ஏற்பாடுகளும் செய்து வந்தேன். ஆனால், ஜனாப் ஜின்னா அவர்கள் முந்தி விட்டார்கள்” என்று குறிப்பிட்டார். ராஜாஜி மந்திரி சபை வழிந்ததில் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்ததில் நியாயம் உண்டு என்றார் பெரியார். இதற்கு உதாரணமாக “வந்தே மாதரம்“ பிரச்சனையை எடுத்துச் சொன்னார். அது - “காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன் எதற்காக ‘வந்தே மாதரப்’ பாட்டைப் பாட வேண்டும்? ஒரு மதஸ்தர்களின் மனத்தைப் புண்படும்படி செய்யும் என்று தோழர்கள் லால்ஜானும், அமீத்கானும் ஆட்சேபித்தால் அவர்களை வெளியில் போகும்படி சொன்னது எவ்வளவு ஆணவ மான செயல் என்பதைப் பாருங்கள்! வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட ‘ஆனந்த மடம்‘ என்ற புத்தகத்தில் முஸ்லிம்களை எவ் வளவு இழிவாகவும் கேவலமாகவும் எழுதி இருக்கிறார் என்பதைப் பாருங்கள். அந்தப் புத்தகத்தில் முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்தும் படியான பல பாகங்கள் இருக் கின்றதுடன், முஸ்லிம்களைத் தாடிக்காரப் பன்றிகள் என் றும், அவர்களைக் கண்ட விடங்களில் எல்லாம் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்களை சட்ட சபையில் பாட வேண்டாம் என்று கூறினால், சட்ட சபையைவிட்டு வெளியில் போகும்படி கூறினால் அவர் கள் சும்மா இருப்பார்களா? நான் கேட்கிறேன் - இன்று சைவர்களில் ஒருவர் விஷ்ணு மதத்தையும் புராணத் தையும் விஷ்ணு கடவுளையும் பற்றி இழிவாகப் புத்தகம் எழுதினால் விஷ்ணு பக்தர்கள் சும்மா இருப்பார்களா? அதே போல் சைவ மதத்தையும் புராணத்தையும் கட வுளையும் பற்றி - புராணங்களில் உள்ளது போல் கூட - வைணவர்கள் எழுதினால் சைவர்கள் சும்மா இருப் பார்களா?”


இந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முஸ்லிம் அல்லாத வேறு ஒரு தலைவர் அன்று தமிழகத்தில் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல இந்தப் பேச்சின் ஊடே “வந்தே மாதரம்” விவகாரத்தில் சென்னை மாகாண சட்டசபையில் முஸ் லிம் உறுப்பினர்களை வெளியே போகும்படிச் சொன் னதும் தெரிய வருகிறது.


அதுபோல வேறு சில செய்திகளும் நமக்குத் தெரி கிறது. அவை - “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப் பட்ட மக்கள் ஆகியவர்களுக்கு இருந்துவந்த சில உப காரச் சம்பளத்தில் கையை வைத்துக் குறைத்து விட் டார்கள். ஆரம்பப் பள்ளிக் கூடங்களை எல்லாம் மூடி விட்டார்கள். இதையெல்லாம் கேட்டால் முதல் மந்திரி யார் ‘வாய்க்கால் கரைகளில் அட்டைகளில் எழுதிப் படித் துக் கொள்ளும்படி’ கூறுதி. இது அரசியல் கொள்கையா, பார்ப்பனீயக் கொள்கையன் தமிழ்நாட்டில் ‘உயர்திரு’ ‘திருவாளர்’ போன்ற தமிழ்ப் பதங்கள் வைத்து அழைத்து வந்ததை நீக்கிவிட்டு ஆரியப் பதமாகிய ‘ஸ்ரீ’ என்ற பதத்தை உபயோகிக்கும்படி உத்தரவிட்டார்கள். இப்படி இவர்கள் செய்தது அரசியல் வேலையா, பார்ப்பன மத வேலையா என்று கேட்கிறேன். ‘விஸ்வப் பிராமணர் கள்’ என்றிருந்தால் இவர்களுக்கு குத்துகின்றதா? குடை கின்றதா? அதை எடுத்து ‘விஸ்வகர்ம’ என்று போட வேண்டும் என்று உத்தரவிட்டார். இது அரசியலா? பார்ப் பனீயமா? இப்படியொரு ஆட்சி நடந்தால் அது தொலைந்தது என்று கேள்விப்பட்டதும் கொண்டா டாமல் என்ன செய்வார்கள்?’’


இப்படியாகப் பெரியார் அன்று உருவாக்கிய இந்து - முஸ்லிம் ஒற்றுமை வெகு ஆதாரமான சமூகக் கூறாகத் தமிழகத்தில் இருந்தது. வட இந்தியா போல இங்கே மதக் கலவரங்களை அவ்வளவு எளிதில் பிராமணியவாதிகளால் உருவாக்க முடியாமல் இருந்ததற்கு இதுவொரு முக்கிய மான காரணமாகும். முஸ்லிம்களோடு பெரியார் கொண் டிருந்த நல்லுறவின் நீட்சியாகத்தான் பம்பாயில் 1940 ஜனவரியில் லீக் தலைவர் ஜின்னாவோடு அவரது சந்திப்பு நடந்தது. அப்போது அம்பேத்கரும் உடனிருந் தார். இந்த மூவரின் கலந்துரையாடல் பிற்காலத்தில் பிராம ணரல்லாதர் - முஸ்லிம்கள் - தாழ்த்தப்பட்ட மக்களின் உறவு வலுவடையக் காரணமாக இருந்தது. குறிப்பாகப் பெரியார் - அம்பேத்கர் உறவு கடைசிவரை மிக நெருக்க மாக இருந்தது. இதுவெல்லாம் பிராமணியத்திற்கு உள் ளார்ந்த எரிச்சலையும் ஆத்திரத்தையும் தந்தது..


திராவிடநாடு தீர்மானம்


தனது பம்பாய் மற்றும் வடநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய பெரியார் நீதிக்கட்சியின் மாகாண மாநாட்டு வேலைகளில் இறங் கினார். இப்போது சுயமரியாதை இயக்கம் என்று தனியாக இல்லை. அவர்கள் எல்லாம் நீதிக்கட்சியில் இருந்தார்கள். நீதிக்கட்சி இப்போது பெரியாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது. அதனுடைய 15வது மாகாண மாநாடு திருவாரூரில் 1940 ஆகஸ்டில் நடைபெற்றது. இங்குதான் புகழ்பெற்ற திராவிட நாடு தீர்மானம் நிறைவேறியது. “திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்தியா மந்திரியின் நேர்ப்பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று அந்தத் தீர்மானம் கோரியது. இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் பி. பாலசுப்பிரமணியம், வழி மொழிந்தவர் அண்ணா . இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து அண்ணா மாநாட்டில் நீண்டதொரு சொற்பொழிவு ஆற்றினார்.


பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சனையானது சாதியப் பிரச்சனையாகவும், வாழ்க்கை நடப்பாகவும், எவருக்கும் எளிதில் புரியத்தக்கதாகவும் இருந்தது. “திராவிடர்கள்” என்பது இனப் பிரச்சனையாகவும், வரலாறு சம்பந்தப்பட்டதாகவும், அறிவுஜீவிகளின் விவ காரமாகவும் இருந்தது. இதுவரை பெரியாரின் இயக்க மானது பிராமணிய எதிர்ப்பு எனும் சமூகநீதிப் போராட்ட இயக்கமாக இருந்தது. இப்போது தனிநாடு கேட்கும் அரசியல் கட்சியாகிப் போனது. அப்போதுதான் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் கேட்கத் துவங்கியிருந்தது. இவர்கள் திராவிடஸ்தான் கேட்க ஆரம்பித்தார்கள். குடிமைச் சமூகத்தில் - கருத்தியல் தளத்தில் - இயங்குவதையே பெரிதும் விரும்பிய பெரியார் இப்போது ஒரு பிரிவினை கேட்கும் அரசியல் கட்சியின் தலைவராகிப் போனார். இப்போது திராவிட நாடு கோரிக்கையின் நியாயத்தை விளக்குவதில் நேரத்தைச் செலவிட வேண்டி வந்தது. அது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாக இருந்தது. தென் னகத்தைப் பொறுத்தவரை எழுந்திருந்தது மொழிவாரி மாநிலத்திற்கான தேசிய உணர்வு தானேதவிர, ஆரிய-திராவிட இனவாரி தனிநாட்டு உணர்வு அல்ல. இல்லாத ஒன்றுக்காய் பிரயாசைப்பட்டார் பெரியார். பிராமணியம் உள்ளூரச் சிரித்திருக்கும்.


சைவர்களை மிரட்டிய


பெரிய புராண எதிர்ப்பு


இதன்பொருள் கருத்தியல் தளத்தில் இயங்குவதைப் பெரியார் கைவிட்டுவிட்டார் என்பதல்ல. அதையும் செய்தே வந்தார். ஆனால் முக்கியத்துவம் இப்போது திரா விட நாடு கோரிக்கைக்கு என்றாகிப் போனது. அதற்கு அக்கம்பக்கமாக இதிகாச எதிர்ப்பு தொடர்ந்தது. கூடவே பெரிய புராணம் எதிர்ப்பும் கந்த புராண எதிர்ப்பும் நடந்தது. இது இந்தி எதிர்ப்பில் பெரியாரோடு இருந்த சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் போன்றோரை அந்நியப்படுத்தியது. அவர்கள் “தமிழருக்கென்று மதம் உண்டு, அது சைவ வைணவமுமே” என்று சொல்லத் துவங்கினார்கள்.


(தொடரும்)


No comments:

Post a Comment