ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் மக்கள் பலி– பின்னணியில் சதி வழக்கில் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் மக்கள் பலி– பின்னணியில் சதி வழக்கில் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை!

featured image

சாமியார் ஆட்சியின் யோக்கியதை இதுதான்!

புதுடில்லி, ஜூலை 10 உத்தரப் பிரதேசத்தில் 121 பேரின் உயிரை பறித்த ஹாத்ரஸ் நெரிசல் நிகழ்வின் பின்னணியில் மிகப் பெரிய சதிக்கான வாய்ப்பு இருப்பதாக சிறப்புப் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கடந்த
2 ஆம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பிறகு போலே பாபா புறப்படும்போது ஏற்பட்ட நெரிசலில் கிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிகழ்வு குறித்த விசாரணைக்கு ஆக்ரா காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அனுபம் குல்ஷேத்ரா, அலிகர் மண்டல ஆணையர் வி.சைத்ரா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்அய்டி) அமைத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இக்குழு தனது விசாரணை அறிக்கையை 8.7.2024 அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
கூட்ட நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முதன்மை காரணம் என எஸ்அய்டி கூறியுள்ளது. நிகழ்வை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் இதனை கூறியுள்ளது. மேலும் தாலுகா அளவிலான காவல்துறை யினர் மற்றும் நிர்வாக அதிகாரிகளும் குற்றவாளிகள் என கண்டறிந்து உள்ளது.
இந்த அதிகாரிகள் நிகழ்ச்சியை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. நிகழ்ச்சி குறித்து தங்கள் மூத்த அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யாமலும், தனது மூத்த அதிகாரிக்கு தகவல் தெரிவிக்காமலும் நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் பல்வேறு உண்மைகளை மறைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளனர். போதுமான ஏற்பாடுகளை செய்ய வில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு வில் இருந்தவர்கள் குழப்பத்தை பரப்பினர். சரியான காவல்துறையின் அனுமதி இல்லாமல் சிலர் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்பாட்டுக் குழுவினர் காவல்துறை யினரிடம் தவறாக நடந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யவிடாமல் தடுக்க முயன்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், தடுப்புகள் அல்லது பாதை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. கூட்ட நெரிசலின் போது ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிகழ்வின் பின்னணியில் மிகப்பெரிய சதிக்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது என எஸ்அய்டி கூறியுள்ளது. எனவே, முழு மையான விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளது. நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், நேரில் கண்ட சாட்சிகள் என 125 பேரின் வாக்குமூலத்தை எஸ்அய்டி பதிவு செய்துள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இந்த அறிக்கையில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை
அதிகாரிகள் நீக்கம்
எஸ்அய்டி-யின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து கடமையில் இருந்து தவறியதாக மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர், சர்க்கிள் அதிகாரி, காவல் நிலைய ஆய்வாளர், புறக்காவல் நிலையப் பொறுப்பாளர்கள் இருவர் ஆகியோரை உத்தரப்பிரதேச அரசு நேற்று (9.7.2024) இடைநீக்கம் செய்துள்ளது.
நெரிசல் நிகழ்வு குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் கண்காணிப்பில் நிபுணர் குழு விசாணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 12 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment