மின் இணைப்பில் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

மின் இணைப்பில் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள்

featured image

சென்னை, ஜூலை13- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு, கட்டட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டடம் கட்டி இருக்க வேண்டும்.

அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப் படாது. எனவே கட்ட டம் கட்டுபவர்கள் விதி களை கடைப்பிடித்து வந்தனர். ஆனால் அதேவேளையில் இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் கள் எழுந்தன.

எனவே தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்ட டங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டடங்கள், 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு, 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதற்கு முன்னர் வணிகக் கட்டடங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், சிலர் இதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

ஏனென்றால் கட்டடம் கட்டுபவர்கள் விதிகளை மீறினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கட்டட நிறைவு சான்றிதழ் வழங்கினால்தான் மின் இணைப்பு என்ற சூழ்நிலை இருந்ததால் விதிகளை மீறுவதற்கு அச்சப்பட்டனர். ஆனால் இப்போது அதிலும் விதி விலக்கு வழங்கி இருப்பதால் விதிமீறல் கட்டடங்கள் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment