சேலம் பள்ளியில் மாணவர்கள் புலால் உணவு கொண்டுவரக் கூடாதாம்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 12, 2024

சேலம் பள்ளியில் மாணவர்கள் புலால் உணவு கொண்டுவரக் கூடாதாம்!

2-22

கருஞ்சட்டை

சேலத்தில் உள்ள செந்தில் பப்ளிக் ஸ்கூல் முதல்வர், பெற்றோருக்கு அனுப்பிய ஆணை வருமாறு:
‘‘துவக்கப் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு – எங்கள் பள்ளிக்கான உணவுக் கொள்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாணவர்கள் எடுத்துவரும் இறைச்சி வகை உணவு சிலரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, அனைவரின் உணர்வுகளையும் மதிக்கும் சூழலை உருவாக்கும் விதத்தில் புதிய உணவுக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது,
அனைத்து மாணவர்களும் உணவு இடை வேளையின் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஆகவே, பள்ளிக்கு இறைச்சி உணவு வகைகளைக் கொண்டுவருவதைத் தடை செய்கிறோம்.
எங்களின் இந்த புதிய உணவுக் கொள்கை அனைவருக்கும் ஒத்துப்போகும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
ஆகவே, இனிமேல் புலால்வகை உணவை மாணவர்களுக்குக் கொடுத்து அனுப்புவதை கட்டாயம் பெற்றோர்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இப்படிக்கு
மனோகரன்
பள்ளி முதல்வர்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளிகளில் இப்படியும் ஒரு பள்ளி இருக்கிறது. அதற்கென்று ஒரு முதல்வர் இருக்கிறார். பெற்றோருக்கு இப்படி ஒரு ஆணையை அனுப்புகிறார் என்றால், அது எப்படி?
பள்ளிக் கல்வித் துறை இப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்கவில்லை. பெற்றோர்கள் எல்லோரும் நீண்ட வரிசையில் நின்று இப்படி ஓர் கோரிக்கையை முன்வைக்கவில்லை.
இந்த நிலையில், இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது எப்படி?
இதன் பின்னணி என்ன?
சங்கிகள் ஊடுருவலா?

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
உரிய நடவடிக்கை எடுக்குமா?

No comments:

Post a Comment