சென்னை மாநகர காவல்துறை புதிய ஆணையராக அருண் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

சென்னை மாநகர காவல்துறை புதிய ஆணையராக அருண் நியமனம்

featured image

சென்னை, ஜூலை 8 சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் அய்பிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் 110-ஆவது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்கவுள்ளார்.

மூளையை தின்னும் அமீபா பாதிப்பு குறித்த வழிகாட்டுதல்
தமிழ்நாடு அரசு வெளியீடு

சென்னை, ஜூலை 8- அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது; “தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனை மருத்துவர்களுக்கும், அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

 

No comments:

Post a Comment