புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு- தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு- தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு!

featured image

சென்னை, ஜூலை 9- புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளதை வரவேற்றுள்ள மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற |நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளதை வரவேற்கிறேன். குற்றவியல் சட்டம் என்பது அரசமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று. இதில் திருத்தங்கள் செய்ய சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீதிபதிகள், வழக்குரைஞர்கள், காவல் துறையினர், பேராசிரியர்கள், வல்லுநர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும்”
இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment