மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணிபுரிவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணிபுரிவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

featured image

சென்னை, ஜூன் 16- தமிழ் நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறு வனத்தினர் விருது பெற விண் ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல இயக் குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தாவது,
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாற்றுத் திற னாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற் றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந் திர நாள் விழா அன்று விருது வழங்கப்பட்டு வரு கிறது.
அதன்படி, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சி தலைவர் –- 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.25,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்.
மாற்றுத் திறனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் –-– 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.
மாற்றுத் திறனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்- – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.
மாற்றுத் திறனாளி களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் -– 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.
மாற்றுத் திறனாளிக ளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர் -– 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.
மாற்றுத் திறனாளிக ளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கி -–– 10 கிராம் எடை யுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
விருதுகளுக்கு விண்ணப் பிக்கும் விருதாளர்கள், “https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்தில் குறிப் பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், விவரங்களை இணைத்து 5.7.2024க்குள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விருதுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர நாள் விழா நிகழ்ச் சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் விருதுகளை வழங்கு வார்.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment