உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதித் தேர்வு முடிவு வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதித் தேர்வு முடிவு வெளியீடு

featured image

சென்னை, ஜூன் 16- உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதித் தேர்வு முடிவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இதில் முதல் இடத்தை மாணவி கீர்த்தனா பிடித்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு வனப்பணியில்(குரூப் 1ஏ) உதவி வனப்பாதுகாவலர் பணியில் காலியாக உள்ள 9 காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு டிஎன்பிஎஸ்சி கடந்த 13.12.2022 அன்று வெளி யிட்டது.
தொடர்ந்து அதே ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வு அக்டோபர் 13 முதல் 17ஆம் தேதி வரை நடந்தது.
சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. இதில் 25 பேர் நேர்முக தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான நேர்முக தேர்வு நடந்தது. நேர்முக தேர்வு முடிந்ததையடுத்து, தேர்வர்கள் மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதி தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment