பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு பிணை மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு பிணை மறுப்பு

சென்னை, ஜூன் 13– சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் முனுசாமி 11.6.2024 அன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பிணை கோரி கார்த்திக் முனுசாமி சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனக்கும், புகாரளித்த பெண்ணுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால், தனக்கு பிணை வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை என புகார் அளித்த பெண் சார்பில் உறுதி அளிக்கப் பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அந்த பெண் சார்பில் நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ள தாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரளித்த பெண் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இருவருக்கும் இடையே சமாதானம் ஆகிவிட்டதாக கார்த்திக் முனுசாமி கூறியது தவறு என தெரிவிக்கப்பட்டது. மேலும், கார்த்திக் முனுசாமிக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் புகாரளித்த பெண் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கார்த்திக் முனுசாமிக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி அல்லி, அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment