பழங்களுக்குள்ள மகத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

பழங்களுக்குள்ள மகத்துவம்

featured image

கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் உஷ்ணமாக இருப்பதால்… ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

அன்னாசி:

இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுவது நிற்கும். வாந்தி, பித்தம், தாகவறட்சி, காமாலை, மாதவிடாய்க் கோளாறுகளில் நல்ல பலனை அளிக்கக் கூடியது.
இலந்தை: இப்பழம் உடலை குளிர்ச்சியாக்கும். தாது விருத்தியை உண்டாக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். அஜீரணம், புளி ஏப்பம், கண்நோய், தொண்டைப் புகைச்சலை நீக்கும்.

ஆப்பிள்:

தூக்கத்தில் நடமாடும் பிரச்சினை உள்ளவர்களுக்கு இரண்டு ஆப்பிளை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்துப் பாலில் கலந்து கொடுப்பது நல்லது. இருதய நோய்களுக்கு ஆப்பிளுடன் தேன் கலந்து உண்ணலாம்.

ஆரஞ்சு:

ஆரஞ்சுப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தப் போக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுக்கப்படுகிறது. உணவுக் கழிவுகள் குடலில் தங்கி விடாமல் தடுக்கிறது. முகப்பருவிற்கு ஆரஞ்சுத் தோலை தண்ணீர் விட்டு அரைத்துப் பூசலாம்.

திராட்சை:

உடல் சூட்டை தணிக்கும். கபக்கட்டு நீக்கும். ரத்தம் விருத்தியாகும். மூளைத் திறன் அதிகரிக்கும். வயிற்றில் ஏற்படும் எரிச்சலை அகற்றும். ஆஸ்துமா பிரச்னைக்கு திராட்சை ரசம் நல்ல பலன் அளிக்கும். சிறுநீரக அழற்சியை நீக்கும்.

நெல்லிக்கனி:

நீண்ட ஆயுளைத் தரும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நெல்லிக்கனி சாறு பயன்படுகிறது. வாந்தி, குமட்டல் போன்றவற்றுக்கு நெல்லிக்கனிச்சாறு பலன் தரும். இதன் சாற்றில் தேன் கலந்து கொடுத்தால் சுவாசக் கோளாறு, விக்கல், பித்த மயக்கம் குணமாகும்.

பப்பாளி:

பப்பாளியில் வைட்டமின் ஏ,பி,சி உள்ளது. ஜீரணம் ஆகக் கூடியது. இளமையும், அழகும் தருவது. பெண்களின் கருப்பைத் தசை நார்களை சுருங்கச் செய்வதற்கு பப்பாளி உதவுகிறது. முறையான மாதவிடாய்ப் போக்கை நிகழ்த்தும்.

No comments:

Post a Comment