நிபந்தனைகளின் அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

நிபந்தனைகளின் அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை

featured image

புதுடில்லி, மே 11 டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி அவர் திஹார் சிறைக்கு திரும்பவேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றக் காவ லில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி டில்லி திஹார் சிறையில் அவர் அடைக்கப் பட்டார்.

இதற்கிடையே, அமலாக்கத் துறை யின் கைது நடவடிக்கையை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 9ஆ-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 29, 30, மே 3, 7 ஆகிய தேதிகளில் வாதங்கள் நடைபெற்றன.
இந்த வழக்கு நேற்று (10.5.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்க கூடாது என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மக்களவை தேர்தலை யொட்டி அவருக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டனர்.

ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது. அதுவரை பிணையை நீட்டிக்க வேண்டும் என்றுஅவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஜூன் 2ஆ-ம் தேதி கெஜ்ரிவால், திகார் சிறைக்கு திரும்ப வேண்டும் என கண்டிப்புடன் உத்தர விட்டனர்.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது: கெஜ்ரிவால் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக வில்லை. கைது நடவடிக்கையை எதிர்த்தே மேல்முறையீடு செய்துள் ளார். மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ஆம் தேதி வரை அவருக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அலுவலகம் செல்ல தடை:

அவர் பிணையில் வெளியே வந்த பிறகு, முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. முதலமைச்சருக்கான பணியில் ஈடுபட கூடாது. எந்த அரசு கோப்பிலும் கையெழுத்திடக் கூடாது. கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) ஒப் படைக்க வேண்டும். டில்லியை விட்டு வெளி மாநிலங்களுக்கு சென்றால் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இதை கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரச் சாரத்தில் மட்டும் அவர் ஈடுபடுவார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி அம் ரித்பால் சிங், தேர்தல் பிரச்சாரத்துக்காக பிணை கோரி மனு தாக்கல்செய்துள்ளார். வழக்கு விசாரணையின்போது இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை சுட்டிக் காட்டியது. கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்குவது தவறான முன்னு தாரணம் ஆகிவிடும் என்று கடும் ஆட் சேபம் தெரிவித்தது. ஆனால், அமலாக் கத் துறையின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. கெஜ்ரிவாலின் பிணை காலம் முடிந்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொண்டர்கள் உற்சாக வரவேற்பு:

இந்நிலையில், திகார் சிறையில் இருந்து பிணையில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 7 மணிக்கு வெளியே வந்தார். ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை உற்சா கத்துடன் வரவேற்றனர். அப்போது கெஜ்ரிவால் பேசும்போது,
“உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி.சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மே 11 (இன்று) காலை 11 மணிக்கு டில்லி கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு நடத்துவேன். பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளதை இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவேற் றுள்ளனர்.

No comments:

Post a Comment