வேலைவாய்ப்புகளை அளிக்கும் வாகன விற்பனை சேவை விரிவாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

வேலைவாய்ப்புகளை அளிக்கும் வாகன விற்பனை சேவை விரிவாக்கம்

சென்னை, மே 11- தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தங்களது புத்தாக்க மற்றும் நம்பகத்தன்மை அதிகரிப்பு மூலம் பிரபலமாகத் திகழும் ஸ்பின்னி நிறுவனம், இந்தியாவின் முன்னணி கார் விற்பனை தளமாகும். இது தற்போது தனது அய்ந்தாவது ஸ்பின்னி பார்க் விற்பனையகத்தை – அனுபவ அங்காடியை சென்னையை அடுத்த பழைய மாமல்லபுரம் சாலையிலுள்ள சோழிங்கநல்லூரில் திறந்துள்ளது.
இந்த அனுபவ அங்காடி முறையின் மூலம் வாடிக்கையா ளர்கள் தங்களது கார் வாங்கும் அனுபவத்தை சிறப்பான தாக்கிக் கொள்ள முடியும். இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட – பயன்படுத்தப்பட்ட கார்களை சென்னையில் விற்பனை செய்வதற்காக, பிரத்யேகமான அங்காடியைத் தொடங்கி யுள்ளது.
இந்த விரிவாக்கம் வாடிக்கையாளர்களின் தேவை அடிப் படையில், உபயோகப்படுத்தப்பட்ட பிரீமியம் கார்களை வாங்குவதற்காக இந்த அனுபவ அங்காடி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
இது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை அளிக்கும். இந்த அனுபவ அங்காடியின் வரவால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படுவதோடு வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. கார் ஓட்டுவதில் புத்தாக்கத்தைக் கொண்டு வரும் ஸ்பின்னியின் இலக்கின் ஒரு பகுதியாகவும், பரந்த வளர்ச்சியுடன் சமூகத்துக்கு சேவையாற்றும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் குறித்து வீடுகளுக்கு கார்களை டெலி வரி செய்யும் சேவையை அளிப்பதிலிருந்தே நிறுவனத்தின் பொறுப்பை உணர முடியும். வீடுகளுக்குச் சென்று காரை சோதிப்பது உள்ளிட்ட சேவைகளை பக்கத்து நகரங்களான சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தி யுள்ளோம் என்று இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நீரஜ் சிங் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment