யார் இந்த வி.கே. பாண்டியன் அய்.ஏ.எஸ். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

யார் இந்த வி.கே. பாண்டியன் அய்.ஏ.எஸ்.

யார் இந்த வி.கே. பாண்டியன் – ஏன் அவர் மீது மோடியும், அமித்ஷாவும் அவ்வளவு வன்மத்தை கக்குகிறார்கள்?
1999இல் ‘பாரடி’ப் புயலினால் அப்போதுதான் பேரழிவை சந்தித்திருந்தது ஒடிசா. அந்த சூப்பர் சூறாவளியில் 10,000 பேர் பலியானார்கள்.
அதே ஒடிசாவில் மிகக் கடினமான நேரத்தில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட, மிகக் கடுமையான உழைப்பாளியான பாண்டியன் 2000ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார், அங்கு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் பணியாற்றினார்.
2004 இல், ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக திவாலாகியிருந்த ரூர்கேலா மேம்பாட்டு முகமைக்கு அவர் தலைமையேற்றார். பாண்டியனின் தலைமையில், ஆர்.டி.ஏ., ரூ.15 கோடி உபரி லாபம் பார்த்தது. அவர் பொறுப்பேற்ற அய்ந்து மாதங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு அவர்கள் பணத்தைத் திருப்பித் தர முடிந்தது.

2005இல், ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்
பஞ்ச் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தி, ஆண்டுக்கு 700 சான்றி தழ்களில் இருந்து 19,000 சான்றிதழ்களாக விநியோகம் அதி கரித்தது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அவர் செய்த பணிகளுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றார். மயூர்பஞ்சில் அதன் வெற்றிக்குப் பிறகு, பொதுப் பணித்துறை (PWD) சான்றிதழ்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு தேசிய மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஹெலன் கெல்லர் விருதைப் பெற்ற ஒரே அரசு அதிகாரி இவர்தான்.

கஞ்சம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பாண்டியன் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலை பாதுகாப்பை வழங்கவும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். அவர் முதல் முறையாக ஊதியத்திற்கான வங்கிக் கணக்கு முறையைத் தொடங்கினார், மேலும் தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் சென்றடைவதை உறுதிசெய்ய 1.2 லட்சம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினார். வி.கே.பாண்டியன் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்திற்காக நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டில், பாண்டியன் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார், அவர் 2023 வரை அப்பதவியில் இருந்தார்.

ஒடிசாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1000, இளைஞர்களுக்கு ஆண்டு உதவித் தொகையாக ரூ.10,000. பெண்கள் இப்போது 0% வட்டியில் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம். உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்த, ஒடிசா இப்போது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது.

பூரி கோயிலுடன், மாநிலத்தில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகளின் மாற்றம் மற்றும் பராமரிப்பையும் பாண்டியன் மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்திய தேசிய ஹாக்கி அணிக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஸ்பான்சர் செய்வதிலிருந்து, தொடர்ந்து இரண்டு முறை ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவது வரை, ஹாக்கியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, வி.கே.பாண்டியன் பன்னாட்டு ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரின் விருதைப் பெற்றார்.
தமிழராக இருந்தாலும் அவர் ஒடிசாவின் மருமகன், அவர் திருமணம் செய்தது சுஜாதா அய்.ஏ.எஸ். என்ற ஒரு ஒடிசாவின் மகளைத்தான்.

27 நவம்பர் 2023 அன்று, கட்சித் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் முன்னிலையில் பாண்டியன் முறைப்படி பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.
23 ஆண்டுகள் ஒரு மாநிலத்திற்காக இரவு பகல் பார்க்காமல் ஓர் இந்தியனாக உழைத்த பாண்டியனை, அந்த மாநில மக்கள் போற்றும் ஒரு திறமையான மனிதரை – எங்கிருந்தோ குஜராத்தி லிருந்து வந்த இருவர், அவர் தமிழர் – அவர் எப்படி உங்களை ஆளலாம் என்று கேட்பது முறையா? ‘பாரத் மாதா கீ ஜெய்’ போடுபவர்கள் மாநிலப் பிரிவினை பேசுவது சரியா? தமிழனின் வளர்ச்சியை பார்த்தால் எப்போதும் ஒரு கூட்டத்துக்கு வயிற்றெரிச்சல்தான்!

No comments:

Post a Comment