விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் சுயமரியாதை இயக்கம்-குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 13, 2024

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் சுயமரியாதை இயக்கம்-குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை

featured image

கண்டாச்சிபுரம், மே 13- சுயமரி யாதை இயக்கம், குடி அரசு நாளேடு (1925-2024) நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் விழுப் புரம் மாவட்டம் கண் டாச்சிபுரம் நகரத்தில் 5.5.2024 மாலை 6 மணி அளவில் மாவட்ட துணை செயலாளர் ஏ.ரமேஷ் தலைமையில் நடை பெற்றது.
மாவட்ட அமைப்பா ளர் சே.வ.கோபண்ணா, மாவட்ட ப.க.தலைவர் துரை.திருநாவுக்கரசு, இளைஞரணி மாநில துணை செயலாளர் தா.தம்பிபிரபாகரன், முகையூர் ஒன்றிய பக அமைப்பாளர் ஏ.பாவ லன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
கண்டாச்சிபுரம் நகர தலைவர் ம.நாகராசன் வரவேற்றார்.
சுயமரியாதை இயக் கம், குடிஅரசு நாளேடு (1925-2024) நூற்றாண்டு விழா பரப்புரை பொதுக் கூட்டத்தில் சி.பி.எம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராம மூர்த்தி, திருவண்ணா மலை மாவட்ட கழக காப்பாளர் வேட்டவலம் பட்டாபிராமன், தலை மைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி ஆகி யோர் உரையாற்றினர்.
மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரை ஞர் பா.மணியம்மை சிறப்புரை ஆற்றினார்.
திண்டிவனம் மாவட்ட கழக தலைவர் இர.அன்பழகன், திண்டி வனம் கழக மாவட்ட செயலாளர் பரந்தாமன், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.சதீசு, மாவட்ட துணைத் தலைவர் க.திருநாவுக் கரசு, மயிலம் ஒன்றிய தலைவர் இரா.பாவேந் தன், திண்டிவனம் நகரத் தலைவர் உ.பச்சையப்பன், முகையூர் ஒன்றிய இளை ஞரணி கவுதமன் ஆகி யோர் பங்கேற்புடன் நகர செயலாளர் முருகன் நன்றி கூற பொதுமக்கள் ஆதரவுடன் பொதுக் கூட்டம் விழா சிறப்புடன் நடைபெற்றது.

No comments:

Post a Comment