செவிலியர் நலனில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவிலியர் நாள் வாழ்த்துச்செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 13, 2024

செவிலியர் நலனில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவிலியர் நாள் வாழ்த்துச்செய்தி

featured image

சென்னை, மே 13- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செவிலியர் நாள் வாழ்த்து செய்தி யில் கூறியிருப்பதாவது:-
செவிலியர்களின் முன்னோடி யான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12ஆம் தேதி ஆண்டு தோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது காயமடைந்த வீரர் களைப் பராமரிப்பதில் நைட்டிங் கேல் அம்மையாரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், துணிவும் இன் றைய செவிலியர் சேவைக்கு அடித் தளமிட்டது. அதை நினைவுகூரும் விதமாக இந்நாள் கொண்டா டப்படுகிறது.

மருத்துவத்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநி லமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கரோனா பெருந் தொற்றின் போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது. அத் தகைய செவிலியர்களின் தொண்டி னைப் போற்றும் வகையில், நமது அரசு பொறுப்பேற்ற பின் அவர் கள் நலனுக்காக பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1,412 ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப் பந்த செவிலியர்களுக்கான ஊதி யம் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 19 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட் டது. மருத்துவப்பணியாளர் தேர் வாணையம் மூலம் தேர்வு செய் யப்பட்ட 1,912 ஒப்பந்த செவிலியர் கள் நிரந்தர செவிலியர்களாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தின் மூலம் 2,650 பெண் சுகாதாரத் தன்னார் வலர்கள் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5,100 நிலையான ஊதியம் பெறுகின்றனர்.
வெளிப்படையான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மூலம் 9,535 செவிலியர்கள் அவரவர் விரும்பிய இடங்களுக்கே பணிமாறுதல்கள் பெற்றுள்ளனர். செவிலியர்கள் பதவி உயர்வு பெறும் பொருட்டு செவிலியர் படிப்புகளின் தரத் தினை மேம்படுத்தும் வகையில் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சை ஆகிய பிரிவுகளில் ‘போஸ்ட் பேசிக் டிப் ளமோ’ செவிலியர் பயிற்சிப் பிரிவு கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் நலனில் செவிலியர்களின் பெரும் பங்கினைப் பாராட்டி அவர்களின் தொண்டு மேன்மேலும் வளர, உலக செவிலியர் நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment